சிரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹோம்ஸ் மாநிலத்தில் சுக்நே நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய வலுவிடத்தை சிரியாவின் அரசு இராணுவப் படை 5ஆம் நாள் கைப்பற்றியது என்று சிரியாவின் செய்திஊடகங்கள் 6ஆம் நாள் தெரிவித்துள்ளன.
சுக்நே நகரம் கைப்பற்றப்பட்ட பிறகு, பாலைவனத்திலுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது சிரியாவின் அரசு இராணுவப் படை, தொடர்ந்து தாக்கியது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டு, அவர்களின் ஆயுதங்கடள் அவிக்கப்பட்டுள்ளன. இதனால், இவ்வமைப்பின் ஆற்றல் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் இராணுவ வட்டாரம் தெரிவித்தது.