பாதிப்பு நிலையைக் கூடிய விரைவில் அறிந்து மீட்புதவிப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, உடனடியாக கட்டளையிட்டார். காயமடைந்தோரை முழு மூச்சுடன் மீட்க வேண்டும். பயணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை உகந்த முறையில் குடியமர்த்த வேண்டும். இயன்ற அளவில் மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் உத்தரவிட்டர்.
நிலநடுக்க நிலைமையின் கண்காணிப்பை வலுப்படுத்தி நிலநடுக்கத்தால் ஏற்படக் கூடிய பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் கட்டளையிட்டார்.