நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மற்றும் சின்ஜியாங்கிற்குச் சீன அரசு 18கோடி யுவான் ஒதுக்கீடு
அண்மையில் சீனாவின் சிச்சுவான் மற்றும் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளப்பெருக்குப் பேரழிவுகள் நிகழ்ந்தன. இவ்விரு இடங்களின் மீட்புதவிப் பணிக்கு ஆதரவளிக்க, சீன மத்திய நிதித் துறை 18கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கு முன், சீன நிதித் துறை அமைச்சகமும் பொதுத் துறை அமைச்சகமும் சிச்சுவான் மாநிலத்துக்கு 10கோடி யுவானை ஒதுக்கி வைத்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சியுச்சேய்கோ மற்றும் புகேய் வட்ட மக்களின் மறுகுடியேற்றம், இடைக்கால வாழ்க்கையுதவி, வீட்டு மறுசீரமைப்பு முதலியவற்றுக்கு இந்தப் பண ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்.