சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கும் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பும் 12ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர்.
இரு தரப்பும் பேச்சுவார்த்தையையும் பரிமாற்றத்தையும் வலுப்படுத்தி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை முன்னேற்றி, பொது அக்கறை வாய்ந்த பிரச்சினைகளை உரிய முறையில் கையாண்டு, சீன-அமெரிக்க உறவில் சிறப்பான வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்று ஷிச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.
முக்கிய பிரச்சினைகளில் தலைவர் ஷி ச்சின்பீங் குடன் பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் நிலைநிறுத்த வேண்டும். பல்வேறு நிலை மற்றும் துறைகளில் இரு நாடுகளும் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
தவிர, கொரிய தீபகற்ப நிலைமை குறித்து இரு வரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.