• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் புதிய அரசின் தூதாண்மை கடமை
  2017-08-13 15:35:02  cri எழுத்தின் அளவு:  A A A   

தாம் வெளியுறவு அமைச்சராகத் தொடர்ந்து பதவி ஏற்றால், பொருளாதாரம் ரீதியான தூதாண்மைப்பணி, புதிய அரசின் தூதாண்மை துறையின் முதன்மை கடமையாக இருக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமத் ஜாவாத் ஷரீப் கூறியுள்ளதாக ஈரான் செய்தி தொலைக்காட்சி நிலையம் 12ஆம் நாள் தெரிவித்தது.

பொருளாதாரம் ரீதியான தூதாண்மையில் கவனம் செலுத்துகின்றோம். பொருளாதாரக் கட்டுமானத்துக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் தூதாண்மைப் பணி துணை புரிய வேண்டும் என கருதுகின்றோம். அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த வேண்டும். இப்பிரதேசத்தில் அமைதி, நிதானம் மற்றும் ஒத்துழைப்பு பாதையை ஈரான் நாடும் என்று ஷரீப் தெரிவித்தார்.

இவ்வாண்டு மே திங்கள், ஈரான் அரசுத் தலைவர் ருஹானி, பொது தேர்தலில் வெற்றி பெற்று, அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 5ஆம் நாள் அவர் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து, தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் துவக்கி வைத்தார். ஷரிபை புதிய அரசின் வெளியுறவு அமைச்சராக அவர் பரிந்துரைந்துள்ளார். அவரது பரிந்துரை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040