கென்யாவின் அரசியல் தலைவர்கள் சட்டப்பூர்வ வழிமுறை மூலம் அரசுத் தலைவர் தேர்தலில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தீர்க்க வேண்டும் என்றும், வன்முறையைப் பயன்படுத்த கூடாது என்ற தெளிவான தகவலை தனக்கு ஆதரவளிப்போருக்கு விடுக்க வேண்டும் என்றும் ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் 12ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் அன்று தனது செய்தித்தொடர்பாளர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், கென்யா அரசுத் தலைவர் தேர்தலின் முடிவை அறிந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மூலம் பதற்ற நிலைமையை தணிவுபடுத்தும் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். ஐ.நா ஆப்பிரிக்க ஒன்றியம் உள்ளிட்ட வாரியங்களுடன் இணைந்து, கென்யாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன் தொடர்பு மேற்கொண்டு, அந்நாட்டின் தேர்தல் போக்கு தங்கு தடையின்றி முடிவுக்கு வருவதை முன்னேற்ற வேண்டும் என்று அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கென்யா அரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 8ஆம் நாள் நடைபெற்றது. வாக்கெடுப்பு முடிவின்படி, தற்போதைய அரசுத் தலைவர் கென்யாடா வெற்றி பெற்றார். இம்முடிவு அறிவிக்கப்பட்ட பின், எதிர்ப் பிரிவினை ஆதரிப்போர் ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் அந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள சில இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழப்பு ஏற்பட்டது. (மீனா)