பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பின் 2ஆம் பத்தாண்டுக் காலம் துவங்கிய பிறகு முதல் உச்சி மாநாடு வரும் செப்டம்பர் சீனாவின் சியாமென் நகரில் நடைபெறவுள்ளது. ரஷியாவின் நெடுநோக்கு ஆய்வு நிறுவனத்தின் பொருளாதார ஆய்வகத்தின் துணைத் தலைவர் செர்ஜி கரடயேவ் சீன வானொலி செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில்
உலக நிர்வாகத்தை முழுமைப்படுத்தும் சீர்திருத்த்த்தில் பிரிஸ்க் அமைப்பின் பங்களிப்பு மிகவும் தெளிவானது. சர்வதேச நிதி அமைப்புமுறைச் சீர்திருத்தத்தை முன்னெடுப்பது மற்றும் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியை நிலைநிறுத்துவது உள்ளிட்ட திட்டவட்டமான தீர்வை நடைமுறைப்படுத்தும் மையமாக பிரிக்ஸ் இருக்கும் என்று குறிப்பிட்டார்.
தற்போது வரை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் வளரும் நாடுகள் வாக்களிக்கும் உரிமை அதிகரித்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் தோற்றம் மற்றும் பயனுள்ள பணி ஆகியவை, அதற்கு முக்கிய காரணங்கள் என்றும் அவர் கூறினார்.
பிற வளரும் நாடுகளுடன் மேலும் பரந்த அளவிலான கூட்டுறவை நிறுவி, "பிரிக்ஸ் பிளாஸ்" என்ற மாதிரியை நடைமுறைப்படுத்தினால், 5 பிரிக்ஸ் நாடுகளுக்கும் பிற கூட்டாளி நாடுகளுக்கும் இடையே இரு தரப்பு மற்றும் பல தரப்பு வர்த்தகம், முதலீடு ஆகியவை மேலதிக நன்மையை பெறும் என்று கரடயேவ் தெரிவித்தார்.