அரசியல் முறையில் கொரிய அணு ஆயுதப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் 16ஆம் நாள் ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரசியல் வழிமுறை, இந்த நெருக்கடிக்குத் தீர்வாகும். ராணுவ நடவடிக்கை, கற்பனை செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஐ.நா. பாதுகாப்பு அவை ஒருமனதாக ஏற்றுக்கொண்ட 2371ஆம் தீர்மானமானது, தூதாண்மைத் தொடர்பு மேற்கொள்வதற்கும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கும் வாய்ப்புகளை அளிக்கும் என்று குட்டரேஸ் கூறினார்.
மேலும், பல்வேறு தரப்புகள் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், ஒன்று மீது ஒன்று வார்த்தை தாக்குதல் தொடுக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.