வெனிசுவேலா அரசும், அரசு எதிர்ப்புப் பிரிவும் மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் 16ஆம் நாள் ஐ.நா தலைமையகத்தில் வேண்டுகோள் விடுத்தார். அரசியல் வழிமுறை மூலம் தற்போதைய சர்ச்சையைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வெளிநாட்டு ராணுவ தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் முதல், வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்குமிடையேயான முரண்பாடு அதிகரித்து வருகிறது. வெனிசுவேலா நாட்டில் பெருமளவிலான அரசு எதிர்ப்பு ஆர்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆர்பாட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் இது வரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். (மீனா)