• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஸ்பெயின் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்! 13 பேர் பலி
  2017-08-18 11:21:22  cri எழுத்தின் அளவு:  A A A   

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் லாஸ் ராம்பலாஸ் பகுதியில் 17ஆம் நாள், மக்கள் கூட்டத்திற்குள் வேன் ஒன்று திடீரென வேகமாக பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் காயமடைந்தனர். அவர்களில் 15 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் அரசு வாரியம் அன்றிரவு உறுதி செய்துள்ளது.

முதல் கட்ட விசாரணையின்படி, இந்த சம்பவம், பயங்கரவாதத் தாக்குதல் என்று உள்ளூர் காவல்துறை அறிவித்துள்ளது. தற்போது, குற்றவாளி என்ற சந்தேகத்துக்குரிய இருவர் கைது செய்யப்படுள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக, இவ்வமைப்பு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040