ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் லாஸ் ராம்பலாஸ் பகுதியில் 17ஆம் நாள், மக்கள் கூட்டத்திற்குள் வேன் ஒன்று திடீரென வேகமாக பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயங்கரவாதக்குதலைக் கண்டித்ததோடு, சர்வதேச சமூகம் உயிரிழந்தோனின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துள்ளன.
ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், பிரேசில், மெக்சிகோ, பெரு, சிலி ஆகிய அமைப்புகள் மற்றும் நாடுகளின் தலைவர்கள் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.