• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியா பிரச்சினை பற்றிய அடுத்த சுற்று அமைதி பேச்சுவார்த்தை
  2017-08-18 16:56:06  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.நா தலைமை செயலரின் சிரியா பிரச்சினைக்கான சிறப்பு பிரதிநிதி ஸ்டேஃபன் தெ மிஸ்துரா 17ஆம் நாள் ஜெனிவாவில், செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தி, சிரியா அமைதி பேச்சுவார்த்தை மற்றும் சிரியா மனித நேய நிலைமையின் புதிய வளர்ச்சியை அறிவித்தார். அக்டோபர் அல்லது நவம்பர் திங்களில், சிரியா பிரச்சினை பற்றிய அடுத்த சுற்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெறக் கூடும். இதற்கு முன்பாக, சிரியாவிலுள்ள எதிர்ப் பிரிவுகள், கலந்தாய்வின் மூலம் ஒரு பிரதிநிதிக் குழுவை உருவாக்கி இவ்வமைதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் என்று மிஸ்துரா தெரிவித்தார்.

இந்த அமைதி பேச்சுவார்த்தை 7 முறைகள் நடைபெற்றது. கலந்துகொள்ளும் எதிர்ப் பிரிவுகள் பிளவுபடுவது, இப்பேச்சுவார்த்தையின் முக்கிய சிக்கலாகும். கடந்த சுற்று பேச்சுவார்த்தையில், ஓர் ஒன்றிணைப்பை உருவாக்கி இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு எதிர்ப் பிரிவுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தற்போது எதிர்ப் பிரிவுகள், இது குறித்து கலந்தாய்வு மேற்கொண்டு வருவதாகவும் மிஸ்துரா தெரிவித்தார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040