ஸ்பெயினின் பார்சிலோனாவில் 17ஆம் நாள் பிற்பகல் சரக்கு வாகனம் பயணிகளின் மீது மோதிய பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த பிறகு, இவ்விடத்துக்கு தெற்கே 100க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவிலுள்ள காம்புரில்ஸ் வட்டத்திலும் இதைப் போன்ற சம்பவம் ஏற்பட்டது. இவ்விரு சவம்பங்களில் 14 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
பார்சிலோனா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாகவும், ஐஎஸ் அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் தலைமையிலான பன்னாட்டுக் கூட்டணியில் கலந்து கொண்ட நாடுகளை இலக்காக கொண்டு இத்தகைய தாக்குதலை நடத்துவதாகவும் ஐஎஸ் அதிதீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின், ஸ்பெயின் நாடு முழுவதிலும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.(வான்மதி)