• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பின்லாந்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்
  2017-08-20 15:31:44  cri எழுத்தின் அளவு:  A A A   
பின்லாந்தின் துர்கு நகரத்தின் மையப் பகுதியில் கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்தது. அதில் இருவர் உயிரிழந்தனர். 8 பேர் காயமுற்றனர். அந்நாட்டின் காவற்துறை இச்சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாக கொண்டு விசாரணை செய்து வருகிறது.

இதற்குப் பின், ஐ.நா. தலைமை செயலாளர் குட்ரேஸ் 19ஆம் நாள் செய்தித் தொடர்பாளர் மூலம் வெளியிட்ட அறிக்கையில் இப்பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

பயங்கரவாதம் மற்றும் அதிதீவிர வன்செயலை ஒடுக்க பின்லாந்து அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஐ.நா. ஆதரிக்கிறது என்றும், இச்சம்பவம் குறித்து பின்லாந்து அரசுக்கும் மக்களுக்கும் குட்ரேஸ் உளமார்ந்த ஆறுதல் தெரிவித்தார் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040