• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் போக்கில் இஸ்ரேல் அமைதி சக்தியின் பங்கினை அபாஸ் வலியுறுத்தல்
  2017-08-21 09:35:34  cri எழுத்தின் அளவு:  A A A   

பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி வளர்ச்சிப் போக்கில் இஸ்ரேலின் அமைதி சக்தி முக்கிய பங்காற்றி வருகிறது என்று பாலஸ்தீன நாட்டின் அரசுத் தலைவர் அபாஸ் வலியுறுத்தியுள்ளார். 20ஆம் நாள் ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் உள்ள ரமாலாவில் இஸ்ரேலின் நியூ மோமெண்ட் கட்சி பிரதிநிதிக்குழுவைச் சந்தித்த போது அவர் இதைத் தெரிவித்தார்.

அமைதிக் கூட்டாளியாக, கட்சியின் கருத்து பாலஸ்தீன தலைவர்களின் கருத்துடன் வேறுபாடு இல்லை என்றும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை அகற்றி, 1967ஆம் ஆண்டு பாலஸ்தீன-இஸ்ரேல் எல்லைக் கோட்டை அடிப்படையாக, பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என கருதுவதாகவும் நியூ மோமெண்ட் கட்சித் தலைவர் சேஹாவா கால்-ஓன் தெரிவித்தார்.

பாலஸ்தீனத்துடனான சமாதான சக வாழ்வு, மனித உரிமை, மதச் சுதந்திரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகளில் நியூ மோமெண்ட் கட்சி கவனம் செலுத்துகின்றது. (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040