ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் இறுதியான முக்கிய வலுவிடமான தால் அபார் வட்டத்தைத் திரும்பப் பெறும் வகையில், அரசுப் படை ராணுவ நடவடிக்கையை துவங்கியுள்ளதாக ஈராக் தலைமையமைச்சரும், படையின் முதன்மை தலைவருமான அபாத் 20ஆம் நாள் அறிவித்தார்.
இது வரை சுமார் 2000 ஆயுததாரிகள் இவ்வட்டத்தில் தங்கியிருக்கின்றனர் என்று ஈராக் ராணுவ வட்டாரப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
மோசுலுக்கு மேற்கு பகுதியில் உள்ள சில பத்து கிலோமீட்டர் தொலைவில் Tal Afar வட்டம் உள்ளது. ஈராக்கின் வட பகுதியில் உள்ள நினிவே மாநிலத்தில் ஐ.எஸ் அமைப்பு கட்டுப்படுத்தும் இறுதியான பகுதி தால் அபார் வட்டமாகும். (மீனா)