சீனா:மேலும் உயர் நிலை சீன-ஆசியான் தொலைநோக்குக் கூட்டாளியுறவை உருவக்க வேண்டும்
2017-08-07 16:21:38  cri
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி 6ஆம் நாள் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நடைபெற்ற சீன-ஆசியான்(10+1) வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்றார். ஆசியான் நிறுவப்பட்ட 50ஆம் ஆண்டு நிறைவை வாழ்த்தி அவர் பேசுகையில், ஆசியான் பொது சமூகத்தின் கட்டுமானத்துக்குச் சீனா அசைவின்றி ஆதரவளிக்கும். பிரதேச ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச விவகாரத்தில் ஆசியான் மேலதிக பங்கினை ஆற்றுவதையும் சீனா ஆதரிக்கும் என்றார்.

மேலும், சீனாவின் ஏழு முன்மொழிவுகளை வாங்யி கூறினார். ஒன்று, சீன-ஆசியான் தொலைநோக்குக் கூட்டாளியுறவின் 2030ஆம் ஆண்டு திட்டத்தை வகுக்க வேண்டும். இரண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கும் ஆசியானுக்குமிடையே உள்ள ஒத்துழைப்பையும் தொடர்பையும் வலுப்படுத்த வேண்டும். மூன்று, 2018ஆம் ஆண்டைச் சீன-ஆசியான் புத்தாக்க ஆண்டாக உறுதிப்படுத்த வேண்டும். நான்கு, சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் மேம்பாட்டை விரைவுப்படுத்தி உலக தாராள வர்த்தக அமைப்பு முறையைப் பேணிக்காக்க வேண்டும். ஐந்து, சீன-ஆசியான் எரியாற்றல் ஒத்துழைப்புக் கூட்டறிக்கையைப் பன்முகங்களிலும் செயல்படுத்த வேண்டும். ஆறு, பண்பாடு, இளைஞர்கள், செய்தி ஊடகங்கள் முதலிய துறைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். ஏழு, பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுப் போக்கைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும். (நிலானி)