திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
2017-08-08 18:37:29  cri

திபெத் வளர்ச்சி உதவி நிதியமும், பெய்ஜிங் டோரேன் சாங் சியோ லோ கண்சிகிச்சை பொது நல நிதியமும் கூட்டாக நடத்திய சிக்காச்செ சமூக நலப்பணியின் நன்கொடை விழா 7ஆம் நாள் சீனாவின் திபெத்திலுள்ள டாஷிஹூபோ கோயிலில் நடைபெற்றது. இவ்விழாவில் பான்சென் லாமா ஜோய்கி கயாய்போ கண்புறை நோய்க்கான சிகிக்கை பெற்ற நோயாளிகளின் பார்வைத்திறன் பற்றிக் கேட்டறிந்தார்.

ஆகஸ்ட் 6ஆம் நாள், பெய்ஜிங் டோரேன் சாங் சியோ லோ கண்சிகிச்சை நிதியம் சிக்காச்செ திபெத்திய மருத்துவமனையில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையை வழங்கியுள்ளது. இந்த நிதியம், திபெத் பீடபூமியில் பொது நலப்பணியை முதல்முறையாக நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.