செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
2017-08-09 14:14:34  cri

ஆகஸ்ட் 8ஆம் நாள் சீனத் திபெத் விமான நிறுவனம் செங்து- காத்மண்டுவுக்கான குறிப்பிட்ட நேர விமான பறத்தல் நெறியைத் திறந்து வைத்துள்ளது. இது வரை ஜொல்மோ லுங்மா தங்க சிகரத்தில் சூரிய மறைவு என்ற மகத்தான காட்சிகளைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பை பயணிகளுக்கு வழங்கும் ஒரெயொரு விமானப் பறத்தல் நெறி இதுவாகும். பயண நேரம் இரண்டரை மணி ஆகும்.

சிச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சீனக் குடிமக்களின் வெளிநாட்டுப் பயணத்தில் மிகவும் வரவேற்கப்படும் இலக்கிடம் நேபாளம் ஆகும் என்று திபெத் விமான நிறுவனம் தெரிவித்தது.

செங்து-காட்மாண்டு பறத்தல் நெறி, திபெத் விமான நிறுவனம் திறந்து வைத்துள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் உள்ள முதலாவது பறத்தல் நெறியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. (மீனா)