சீனர்களின் தேய்வர்கள் 1
中国国际广播电台
 

பண்டைக் காலத்தில் நகர் மக்களின் பாதுகாப்புக்காக அகழிகளைக் கட்டினார்கள். அவர்கள் ஒரு நகரத் தெய்வத்தின் ஆலயத்தையும் கட்டினார்கள். வரலாற்றுப் புத்தகத்தின் படி நகர ஆலயத் தெய்வம் மானிடத் தெய்வமான சுய் யொங்கில் இருந்து வளர்ந்தது. மிக ஆரம்ப கால வரலாற்றில் உள்ள நகரத் தெய்வத்தின் ஆலயமானது கிழக்குச் சீனாவில் கி.பி.239 இல் கட்டப்பட்டது.

மிங் வம்சத்தில் கி.பி 1368-1644முதலாவது பேரரசம் சூ யுவான் சாங் நகர்த தெய்வத்தின் ஆலயத்தை உயர்வாகப்போற்றினார். ஏனென்றால் நகரத் தெய்வமானது பாதாளத்தில் பயங்கரமான அடிமைகள், ஆவிகள், உள்ளூர் நீதிபதி போன்றவற்றுக்கு பொறுப்பாக இருந்தது. ஆலயத்தில் ஒரு தெய்வம் அம்ர்ந்து இருக்கிறது. மற்றையது நகரைச் சுற்றி வந்து கண்காணிக்கின்றது. கண்காணிப்புப் பயணம் ஒவ்வொரு வருடத்திலும் வசந்தகாலம், இலையுதிர்க்காலம் மற்றும் குளிர்காலம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும். இது ஏனைய மாநிட செய்ற்பாடுகளுடன் ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கின்றது. படத்தில் ஆலயத் தெய்வத்துடன் நான்கு உதவியாளர்கள் சேர்ந்து இருக்கிறார்கள்.