சியாயேசின்
中国国际广播电台

சியாயேசின்

சியாயேசின் எனப்படும் இசைக்கருவி கொரிய இனத்தின் தொன்மை வாய்ந்த இசைக்கருவியாகும். அது, வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாநிலத்து யெபியென் கொரிய இனத் தன்னாட்சி வட்டாரத்தில் பரவிவருகின்றது. அதன் வடிவம் ஹென் இனத்தவரின் குச்சன் என்னும் இசைக்கருவி போன்றது. வரலாற்றுப் பதிவேட்டின் படி, கி.பி. 500ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் கொரிய பண்டைக்கால நாடான சியாயேசின் நாட்டு மன்னர் குச்சன் வடிவத்தில் ஒரு வகை நரம்பிசைக் கருவியைத் தயாரித்தார். சியாயேசின் என்று கொரிய இன மக்கள் இதற்குப் பெயர் சூட்டினர்.

இது வரை இவ்விசைக்கருவி 1500 ஆண்டு வரலாறுடையது. பண்டைகாலத்தில் இருந்து சியாயேசின் என்னும் இசைக்கருவி தணிவாக ஒலித்தது. சில நூறு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு, கொரிய இன மக்கள் இது போன்ற மற்ற இசைக் கருவிகளின் மேம்பாட்டைப் பயன்படுத்தி, இறுதியில் தேசிய இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த தரமான சியாயேசினை என்னும் இசைக்கருவியைத் தாயாரித்துள்ளனர்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், இவ்விசைக்கருவி மேலும் மேம்பட்டுள்ளது. 18 அல்லது 21 தந்திகளைக் கொண்ட சியாயேசின் இசைக்கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சியாயேசின் என்னும் இசைக்கருவியின் ஒலி இனிமையானது. இவ்விசைக்கருவியை மீட்டும் போது, இடது கையால் தந்திகளை வருடி, வலது கையால் இசையின் அளவை நிர்ணயிக்கலாம். இவ்விசைக்கருவி, இரு குரல் இசை அல்லது கூட்டுக்குரலிசையில் பயன்படுத்தப்படுவதுண்டு. மக்களின் மகிழ்ச்சி, கோபம், துயரம் உள்ளிட்ட வேறுபட்ட உணர்ச்சிகளை இவ்விசைக்கருவி மூலம் வெளிப்படுத்தலாம். குறிப்பாக, மகிழ்ச்சிகரமான நாட்டுப்புற இசைப் படைப்புகளை இயக்குவதற்கு இவ்விசைக்கருவி தகுந்தது. முன்பு, இவ்விசைக்கருவியை இயக்குப்பவர்களில் பெரும்பாலோர் ஆண்கள். ஆனால், இவ்விசைக்கருவி, கொரிய இன மக்களின் மிக முக்கிய தேசிய இன இசைக்கருவிகளில் ஒன்றாக மாறியுள்ளதால், பெண்களும் அதிகம் இசைக்கின்றனர்.

சியாயேசின் என்பபடும் இசைக்கருவி முக்கியமாக கூட்டிசைப் பாடல்களைப் பாடுவதற்குப் பயன்படுத்தப்படும். தேசிய இனக் குழுவில் பயன்படுவதுண்டு. இவ்விசைக்கருவியை மீட்டும் போது, தேசிய இன ஆடை அணிந்த பத்துக்கும் அதிகமான கொரிய இன மகளிர் மேடையில் ஒரு வரிசையாக இருந்து, சியாயேசினின் பின் பகுதியைத் தரையில் வைத்து, அதன் முற்பகுதியை தமது கால் முழங்காலில் சாய்த்து வைத்து, இடது கையால் தந்தி வருடி, வலது கையால் இசை அளவை நிர்ணயித்து, இசை இயக்குவதோடு, பாடல் பாடுவர். அப்போது, இசைக்கருவியின் குரலொலியும் பாடலொலியும் இணைந்து ரசிகர்களை மகிழ்விக்கும். மிகவும் இனிமையானது.

அலிலாங் என்னும் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.