中国国际广播电台
மிங்
வம்சாட்சிக்காலம்
(கி.
பி.
1368ஆம் ஆண்டுமுதல்
1644ஆம்
ஆண்டு வரை)தொட்டு,
சீனா நிலப்பிரப்பு
சமூகத்தின் பிற்காலத்தில்
நுழைந்தது.
இக்காலகட்டத்தில்
கட்டிடங்கள் எல்லாம் சோங்
வம்சாட்சிக்காலத்தின் மாதிரியை
ஏற்றுக்கொண்டன.
அவற்றில் குறிப்பிட்ட
மாற்றம் இல்லை.
ஆனால்,
கட்டிடங்களின் வரைவில்,
பிரமாண்டமும்,
கம்பீரமும் முக்கிய
சிறப்பியல்பாகும்.
இக்காலகட்டத்தில் நகரங்களின்
வடிவமைப்பும்,
அரசு மாளிகையும்
பிற்காலத்திலும்
பயன்படுத்தப்படுகின்றன.
தலைநகரான பெய்சிங் மாநகரம்,
தற்போது நிலவும் அளவில்
மிக பெரிய பழைய நகரமான நான்ஜிங்
ஆகியவை மிங் வம்சாட்சிக்
காலத்திலான வடிவமைப்பு மற்றும்
நிர்வாத்தினால் நன்மை பெற்றன.
ச்சிங்
வம்சாட்சிக்காலத்திலான பேரரசர்
மாளிகைகளும் மிங்
வம்சாட்சிக்காலத்தின் அரசு
மாளிகையின் அடிப்படையில்
இடைவிடாமல் விரிவாகி வளர்கின்றன.
இக்காலகட்டத்திலான பெய்சிங்
மாநகரமும் ஏற்கனவே உள்ள
அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது.
பின்னரே,
புற நகரம்,
உள்நகரம்,
அரச குடும்ப நகரம் ஆகிய
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது.
மிங்
வம்சாட்சிக் காலத்தில் நகரின்
பாதுகாப்புக்காக,
சீனப் பெருஞ்சுவர்
தொடர்ந்து பெரும் முயற்சியுடன்
கட்டப்பட்டது.
பெருஞ் சுவரின் பல முக்கிய
பகுதிகளும் நுழைவாயில்
கோபுரங்களும் செங்கற்களால்
கட்டப்பட்டன.
கட்டுமானத் தரம் உச்ச
நிலையை எட்டியது.
மிங் வம்சாட்சிக் காலத்தில்
பெருஞ் சுவர்,
கிழக்கில் யாலூஜியாங்
ஆற்றங்கரையிலிருந்து மேற்கில்
கான்சு மாநிலத்து ஜியாயுக்குவான்
எனும் இடம்வரை செல்கின்றது.
மொத்த நீளம்
5660
கிலோமீட்டராகும்.
ஷான்ஹைக்குவான்,
ஜியாயுக்குவான் முதலிய
புகழ்பெற்ற நுழைவாயில் நகரங்கள்
சீனக் கட்டிடக் கலையில்
தனிச்சிறப்பு பாணியைக் கொண்ட
தலைசிறந்த படைப்புகளாகும்.
தற்போது பெய்சிங்கிலுள்ள
பாதாலிங் பெரும் சுவர் பகுதியும்
சுமாதை பெரும் சுவர் பகுதியும்
ஒப்பீட்டளவில் உயர் கலை மதிப்பை
கொண்டிருக்கின்றன.
படம்:பெருஞ்சுவர்
இக்காலக்கட்டத்தில்,
மாளிகை மாதிரி
கட்டிடங்களின் அலங்காரம்,
வண்ண ஓவியம் ஆகியவை
படிப்படியாக நிலைபெற்றன.
அலங்காரப் பொருட்களில் பல
செங்கல்,
வண்ணமும் பளபளப்பும் உடைய
ஓடு,
கடின மரம் உள்ளிட்ட வேறுபட்ட
தரமுடைய படைப்புகளும்
காணப்படுகின்றன.
குடியிருப்பு வீடுகளின்
சுவரில் செங்கல் பரவலாக
பயன்படுத்தப்பட்டது.
மிங்
வம்சாட்சிக் காலத்தில்,
சீனக் கட்டிடங்களின்
ஒழுங்குமுறை மேலும்
பக்குவமடைந்தது.
நான்ஜிங் நகரிலுள்ள
மிங்சியோ கல்லறை,
பெய்சிங்கிலுள்ள
13
பேரரசர் கல்லறைகள் ஆகியவை நில
அமைவையும் சுற்றுச்சூழலையும்
நன்றாக பயன்படுத்தியதால்,
கல்லறை மிகவும் அமைதியாக
திகழ்வதில் ஒரு சிறந்த மாதிரியாக
விளங்குகின்றன.
பெங்ஷுயி
(வாஸ்து சாஸ்திரம்)என்பது,மிங்
வம்ச ஆட்சிக்காலத்தில் மிகுதியும்
வளர்ந்தது.
சீனக் கட்டிட வரலாற்றில்
சிறப்புமிக்க பண்டைக்கால
பண்பாட்டு நிலைமை,
நவ காலம் வரை
நீடித்துவருகின்றது.
தவிர,
மிங் வம்சாட்சிக்காலத்தின்
வீட்டுப் பயன்பாட்டுப்
பொருட்களும் உலகில் புகழ்பெற்றவை.
|