நெடுநோக்குப் பார்வையில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க சீனா - இந்தியா முயற்சி!
சீன மற்றும் இந்திய தலைவர்களிடையே 2ஆவது முறை சாரா சந்திப்பு அக்டோபர் 11, 12 ஆகிய நாட்களில் சென்னைக்கு அருகில் நடைபெற்றது. அப்போது, நெடுநோக்கு மற்றும் நீண்டகாலப் பார்வையில் சீன-இந்திய உறவின் வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியை ஊட்ட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.