தைவான் உலக சுகாதார மாநாட்டில் பார்வையாளராகப் பங்கேற்பது பற்றி ஒரு சில நாடுகள் முன்வைத்த கருத்துருவை, 75ஆவது உலக சுகாதார மாநாடு 23ஆம் நாள் நிராகரித்தது.
19ஆம் நாளிரவு நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்தி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
உலகச் சுகாதார அமைப்பில் இறையாண்மை கொண்ட நாடுகள் மட்டுமே பங்கேற்க முடியும். சீனாவின் தைவான் பிரதேசம் உலகச் சுகாதார அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஒரே சீனா கொள்கையின் அடிப்படையில் தான் பங்கேற்க வேண்டும்.
சீன வணிக அமைச்சகம் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், நாடளவில் உள்ளபடியே அன்னிய முதலீட்டுப் பயன்பாட்டுத் தொகை, 47 ஆயிரத்து 861 கோடி யுவான் எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதி ஆதரவுடன், அது, நிதியுதவி வழங்கிய முறையில், அமெரிக்காவின் தேசிய ஜனநாயக அறக்கட்டளை,அமெரிக்க கருத்துகளைப் பரப்பி, பிரிவினைவாதம் மற்றும் பகைமையைத் தூண்டிவிட, பல அரசு சாரா நிறுவனங்களைக் கையாண்டு வருகிறது.
அமெரிக்காவின் என்பிசி ஒலிப்பரப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மே 4ஆம் நாள் வரை, அமெரிக்காவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது.
“ஒரு பேய், தென் பசிபிக் பெருங்கடலில் அலைந்து சென்று கொண்டிருக்கிறது. நான் சொல்வது, சீனா அல்ல. மாறாக, நாங்கள் தான். ”என்று பிரிட்டனின் நாளிதழ் விமர்சித்துள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை, அமெரிக்காவுக்கு அனுப்ப பிரிட்டனின் லண்டன் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து சில தரப்புகள் சந்தேகத்தை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தைவானுக்கு ஆயுதங்களை விற்பது, அமெரிக்கா நடத்தும் தந்திரம் மட்டுமே. அமெரிக்காவின் கைகளிலுள்ள சதுரங்க வீரரின் தலைவிதி என்ன என்பதற்கு முன்கூட்டியே பதில் கிடைத்துள்ளது.
உக்ரைன் பதற்றம், பனிப் போரின் சதியாளரான அமெரிக்கா, 21ஆம் நூற்றாண்டில் உருவாக்கியுள்ள புதிய பொறி ஆகும். ரஷியாவின் சக்தியைப் பலவீனப்படுத்தல், ஐரோப்பாவைக் கட்டுப்படுத்துதல், உலகில் தனது மேலாதிக்கத்தைப் பேணிக்காத்தல் ஆகியவை அதன் உள்நோக்கமாகும்.
கோவிட்-19 தொற்று நோய் மற்றும் பிராந்திய மோதல் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்த சூழலில், இந்த நல்ல அறிகுறி மிகவும் முக்கியமானதாகவும், உலகில் உறுதியற்ற தன்மையின் பாதிப்பை குறைக்க முடியும்
அண்மையில் அமெரிக்கத் தேசிய ஜனநாயக நிதியத்தின் தலைவர் டேமன் வில்சன் தலைமையிலான குழுவினர்கள், சீனாவின் தைவானில் பயணம் மேற்கொண்டு, உலகளவில் வண்ணப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகப் பரப்புரை செய்தார்.
அமைதி, நிதானம், வளர்ச்சி, செழுமை ஆகியவை ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்ப்பார்ப்புகளாகும். பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேசச் சமூகத்தின் பொது நலன்களுக்கும் பொருந்தியதாகும்
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அன்ஹுய் மாநிலத்தில் 3ஆவது ஆப்கானிஸ்தான் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்கவுள்ளார். ஆப்கானிஸ்தானின் அமைதி புனரமைப்புக்குச் சீனா ஆக்கப்பூர்வமாக முயற்சி செய்வதை இச்செயல் காட்டுகின்றது.
நேட்டோ பல ஆண்டுகளாக கிழக்கு நோக்கி விரிவாக்கிக் கொண்டே வருவதால், ரஷியா-உக்ரான் இடையே பதற்றம் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இந்தப் பேரிடருக்கு முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டும்
ரஷிய-உக்ரைன் மோதல் துவங்கியதற்கு முன்பும் பின்பும், சில அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் சீனாவுக்கு எதிராக தொடர்ந்து பொய்யான செய்திகளை பரப்பி வந்தன.
அமெரிக்கா தனது கூற்றுக்கிணங்க செயல்பட்டு, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் இருநாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துக்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
யாருக்கு அக்கறை செலுத்துவது, யாருக்கு அக்கறை செலுத்தாது ஆகியவற்றில், செய்தி ஊடகங்கள் மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து முடிவெடுத்துள்ளனர். அவர்களின் பார்வையில், மத்திய கிழக்கு அகதிகளோ அல்லது உக்ரைன் அகதிகளோ, அரசியல் நலன்களை பெற்று, அமெரிக்காவின் பேராதிக்கத்தைக் காப்பத்துவதற்கான கருவியாகக் கருதப்படுகிறது.
கடந்த நவம்பரில் சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் நேரடியாக களத்தில் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
அரசுத் துறைகள் தனதுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று ஆண்டுக் கூட்டத் தொடர்களில் பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.
போர்களால் விஷக் கிருமிகள் கசிவதைத் தவிர்க்கும் வகையில், அண்மையில், நாட்டின் பொது சுகாதார ஆய்வகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிக ஆபத்து வாய்ந்த நோய்க்கிருமிகளை அழிக்க வேண்டும் என்று உக்ரைனுக்கு உலகச் சுகாதார அமைப்பு யோசனை தெரிவித்தது.
ரஷியாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தடை செய்யும் சட்ட முன்மொழிவு அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையில் 9ஆம் நாள், நிறைவேற்றப்பட்டது. இத்தடை ரஷியா மீது என்று பொருள் கொள்வதை விட ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதானது என்று ஐரோப்பிய இணையவாசிகள் தெரிவித்தனர்.
அமைதி நோக்கிற்காக இயங்கும் இந்த ஆய்வகங்கள் இருக்கின்ற உள்ளூர் சுகாதார வாரியங்களக்கும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையில் ஏன் தொடர்பு இருக்கு?
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் அரசுத் தலைவர் மற்றும் ஜெர்மனி தலைமையமைச்சருடனான காணொளி மாநாட்டில் கூறுகையில், ஐரோப்பிய கண்டத்தில் மீண்டும் போர் ஏற்பட்டுள்ளதற்கு சீனா வருந்துகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடர்கள், சீன ஜனநாயகத்தின் தரத்தை வெளிநாடுகள் கவனிக்கும் ஒரு முக்கிய ஜன்னலாகத் திகழ்கின்றன.
சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 27 கேள்விகளுக்குப் பதிலளித்ததோடு, சீனாவின் தூதாண்மை கொள்கைகளையும் ஆழ்ந்த முறையில் விளக்கிக் கூறியுள்ளார்.
செவ்விந்தியர்களின் மீது அமெரிக்கா மேற்கொண்ட இனப் படுகொலையின் வரலாற்று உண்மைகள் மற்றும் நடைமுறை சான்றுகள் என்னும் அறிக்கையைச் சீன வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 2ஆம் நாள் வெளியிட்டது.
2021ஆம் ஆண்டு சீனத் தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிவர அறிக்கையைச் சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் பிப்ரவரி 28ஆம் நாள் வெளியிட்டது.
உக்ரைன் பதற்றத்தைத் தீர்ப்பதற்கு, நிலையைத் தீவிரமாக்குவதற்குப் பதிலாக, அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது தான் தீர்வாகும். தற்போது, உக்ரைனின் நிலைமை மோசமாகி வருகிறது.
சீன அஞ்சல் நிறுவனத்தின் முதலாவது காஃபி கடையான ’போஸ்ட் காஃபி’சியாமென் நகரில் திறக்கப்பட்டது. இத்தகவல், சீனாவின் சமூக வலைதளத்தில் பிரபலமடைந்து, அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, இதுவரை மிக அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியாக மாறியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு 16ஆம் நாள் வெளியிட்டுள்ள இச்செய்தி, உலகளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்மையில், அர்ஜென்டீன அரசுத் தலைவர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, கூட்டறிக்கை ஒன்றைச் சீனாவும் அர்ஜென்டீனாவும் வெளியிட்டன. மால்வினாஸ் தீவுகள் பிரச்சினையில் இறையாண்மையை அர்ஜென்டீனா பயன்படுத்துவதற்குச் சீனா ஆதரவு அளிக்கின்றது.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் பாதுகாப்பானதொரு விளையாட்டுப் போட்டியாக இருக்கும் என்று பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மருத்துவ நிபுணர் குழுவின் தலைவர் பிரையன் மெக்லோஸ்கி மதிப்பிட்டார்.
சீனாவின் "கடுமையான" தொற்றுநோய் தடுப்புக் கொள்கையால், சீனாவுக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கருத்தில் கொண்டு வருகின்றது.
சீனாவுக்கும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்டு 30ஆவது ஆண்டு நிறைவுக்கான காணொளி உச்சிமாநாடு 25ஆம் நாள் பிற்பகல் நடைபெற்றது.
லிதுவேனிய அரசியல்வாதிகள் ஒரே சீனா கொள்கைக்கு சவால் விடுத்து சீனாவுடன் பதற்றத்தை ஏற்படுத்தியதால், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களும் லிதுவேனியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டுத் தொழில் நிறுவனங்களும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன என்று பல செய்தி ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளன.
எம் ஐ டி பல்கலைக்கழகத்தின் சீன வம்சாவழி பேராசிரியர் ச்சேன் காங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க சட்ட அமைச்சகம் ஜனவரி 20ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்தது.
எந்த நாடு முழு உலகையும் அச்சுறுத்துகின்றது, எந்த நாடு பன்னாட்டு ஒழுங்கையும் பல தரப்பு விதிகளையும் அத்து மீறுகின்றது என்பதை உலக மக்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் அமெரிக்காவின் "கறுப்பு சிறைகள்" தன்னிச்சையான தடுப்புக்காவல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கான சின்னமாக மாறிவிட்டன. ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2003ஆம் ஆண்டில் குவாண்டனாமோ வளைகுடா தடுப்பு முகாமில் 700 கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
10ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலான இருப்புப்பாதை, கிட்டத்தட்ட 1 லட்சம் கிலோமீட்டர் நெடுஞ்சாலை, சுமார் ஆயிரம் பாலங்கள் மற்றும் நூறு துறைமுகங்கள், பல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் ஆகியவை அனைத்தும், சீன –ஆப்பிரிக்க ஒத்துழைப்பால் பெறப்பட்ட உண்மையான சாதனைகளாகும்.
உண்மையான சின்ஜியாங் எப்படி இருக்கும் என்பதற்கு டெஸ்லா நிறுவனத்தின் நடவடிக்கையே பதிலாக அமைந்துள்ளது. மேலும், உலகளவில் சின்ஜியாங்கிற்கு சென்ற பல வெளிநாட்டவர்கள் தங்களது அனுபவங்களின் மூலம் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நாடுகள் "சுதந்திரம் மற்றும் திறப்பு" போன்ற முழக்கத்தைப் பரப்பி வருவது, பாசாங்குத்தனமானதாகவும் அபத்தமானதாகவும் உள்ளது என்பது மெய்ப்பிக்கப்பட்டுகிறது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் திசையைத் தேர்வு செய்ய தனது கூட்டணி நாடுகளையும் தொழில் நிறுவனங்களையும் நிர்ப்பந்தித்த செயல்கள் அசிங்கமானவை. நிறுத்தப்படலாமே!
அணு ஆயுதம் கொண்ட சீனா, ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளின் தலைவர்கள், ஜனவரி 5ஆம் நாள், அணு போர் தடுப்பு மற்றும் படைக்கல போட்டியைத் தவிர்ப்பது பற்றிய கூட்டறிக்கையை வெளியிட்டன.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், புத்தாண்டை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு வாழ்த்துரை தெரிவித்தார். 2021ஆம் ஆண்டில் சீனா படைத்துள்ள சாதனைகள், சீன மக்களுக்கு நன்மை தருவது மட்டுமல்ல உலகிற்கும் ஆக்கப்பூர்வமான சக்தியையும் ஊட்டியுள்ளன.
புத்தாண்டின் முதல் நாளில், ஆர்சிஈபி உடன்படிக்கை அதாவது பிராந்திய பன்முகப் பொருளாதார கூட்டாளியுறவு பற்றிய உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலை நாட்டு அரசியல்வாதிகள் செய்திச் சுதந்திரத்தைக் கவனிப்பதற்கு மாறாக, ஹாங்காங்கின் நிதானம் மற்றும் சட்டப்பூர்வ நிர்வாகத்தை பார்க்க விரும்பவில்லை என்பது உண்மை.
அமெரிக்க படை போரில் அதிகமான அப்பாவி மக்களைக் கொன்றதை வெளிப்படுத்திய செய்தியாளர் அஸ்மாட் கானின் ஆய்வுக் கட்டுரை அண்மையில் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் தொடர்ச்சியாக வெளியானது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உருவாக்கிய 5 கண்கள் கூட்டணி ஜனநாயகம் மற்றும் மனித உரிமை என்ற பெயரில், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 7ஆவது சட்டமியற்றல் குழு தேர்தல் பற்றித் திரித்துப் பேசியது நியாயமற்றது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 15ஆம் நாள் பிற்பகல் ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் காணொளி வழியில் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். கடந்த நூற்றாண்டில் கண்டிராத மாற்றம், கரோனா தொற்றுநோய் ஆகியவற்றின் பாதிப்புகளை அகற்றி, சீன-ரஷிய உறவு புதிய உயிராற்றலைக் காட்டியுள்ளது.
வங்காளத் தேசத்தின் காவல்துறையைச் சேர்ந்த விரைவுத் தாக்குதல் படைப்பிரிவு மற்றும் தொடர்புடையவர்களின் மீது மனித உரிமை அத்துமீறல் என்ற பெயரில், தடை நடவடிக்கை மேற்கொள்வதாக அமெரிக்கா 10ஆம் நாள் தெரிவித்தது.
அமெரிக்காவின் தலைமையில் "ஜனநாயக உச்சி மாநாடு" உள்ளூர் நேரப்படி 10ஆம் நாள் நிறைவடைந்தது. ஹாங்காங் குழப்பத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்ற லுவோ குவான்காங், தைவான் அதிகார வட்டாரத்தின் பிரதிநிதி டாங் ஃபெங் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றது சர்வதேசச் சமூகத்துக்கு அபத்தமானதாகவும் கேலிக் கூத்தாகவும் இருப்பதாகக் கருதப்படுகின்றது.
ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கும் அமெரிக்க அரசியல்வாதிகள், அமெரிக்காவில் பழங்குடியினத்தவர்களின் குரல் மற்றும் குற்றச்சாட்டுக்களைக் கேட்காதது போல பாசாங்கு செய்யக் கூடாது.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என்று அமெரிக்கா உண்மையாக விரும்பினால், ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்க வேண்டியது அவசியம். இதன் மூலம், 20 ஆண்டுகளில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ‘ஜனநாயக மறுசீரமைப்பு’ ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வந்துள்ள விளைவுகளை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
மனித
உரிமைகளை மீறிய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தது, மனித உரிமை துறையில்
லிதுவேனியாவின் இரட்டை வரையறையை வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லிதுவேனியா இதை சுய மதிப்பீடு செய்து, சர்வதேச சமூகத்துக்கு பொறுப்புடன் பதில்
அளிக்க வேண்டும்.
2015ஆம் ஆண்டு 10 பெரிய ஒத்துழைப்புத் திட்டங்கள் முதல், 2018ம் ஆண்டு 8 பெரிய நடவடிக்கைகள் வரை, தற்போது 9 பெரிய திட்டப்பணிகளுடன் சேர்ந்து, சீன – ஆப்பிரிக்க உறவு, புதிய கட்டத்தில் நிற்கிறது. எதிர்காலத்தை நோக்கி செல்லும் வேளையில் சீனா முன்பு போலவே வாக்குறுதியை நிறைவேற்று வருவது சுட்டிக்காட்டத்தக்கது.
ஆப்பிரிக்காவின் ஒரு புகழ்பெற்ற பொது மக்கள் கருத்து கணிப்பு நிறுவனம் வழங்கிய அறிக்கையின்படி, ஆப்பிரிக்காவில் மிகச் செல்வாக்குடைய நாடுகளின் வரிசையில் சீனா முதலிடம் வகிக்கின்றது.
மக்களுக்கு நன்மை தருவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும் என்று 19ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்துக்கான 3ஆவது கருத்தரங்கில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
இச்சூழலில், ஆசிய பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு, “சிலருக்கு தோல்வியும் சிலருக்கு வெற்றியும் கிடைக்கும் “ அரசியல் விளையாட்டு அல்ல. மாறாக, இத்தகைய ஒத்துழைப்பு, பல்வேறு தரப்புகளும் சாதனைகளைப் படைக்கக் கூடிய திறந்த மேடையாக திகழ்கிறது.
சீனாவின்
மாபெரும் சந்தை, பொருளாதார மீட்சியினால் ஏற்பட்டுள்ள அதிக தேவைகள், உயர் தர வளர்ச்சிக்குத்
திரும்புவது ஆகியவை உலகிற்கு அதிகப்படியான முன்பதிவு படிவங்களைக் கொண்டு
வந்துள்ளன.
வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவதில் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும் சீனா, சர்வதேச நிறுவனங்களுக்கு நம்பிக்கை தருவது என்பது இதற்கு மிக முக்கிய ஆதாரமாகும்.
கனெக்டிகட் அணு நீர்மூழ்கிக் கப்பல் விபத்து பற்றி கடலடியிலுள்ள பெயர் தெரியாத ஒரு மலையின் மீது மோதியதாக அறிவித்ததைத் தவிர, அமெரிக்கப் படை, மற்ற விளக்கம் எதையும் கொடுக்கவில்லை.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தற்போது சிக்கலான நிலைமை தோன்றிய சூழ்நிலையில், இந்தக் கப்பல் தென் சீனக் கடற்பரப்பில் ராணுவ உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்காக வந்தது என்று சிலர் கருதுகின்றனர்.
ஜி-20 உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் முன்வைத்த 5 முன்மொழிவுகள், சர்வதேசக் கவனத்துக்குப் பொருந்தும் விதம் உள்ளன. அவை, அறைகூவல்களைச் சமாளித்தல் மற்றும் கூட்டு வளர்ச்சி திட்டத்தில் மனித குலத்துக்கு வழிவகுக்கின்றன.
சர்வதேச நிலைமை எவ்வாறு மாறிய போதிலும், சீனா வாக்குறுதியை நிறைவேற்றி,
பலதரப்புவாதத்திலும், ஒத்துழைப்பு மற்றும் ஒன்றுக்கொன்று நன்மை தருவதிலும் ஊன்றி
நின்று, பாரிஸ் உடன்படிக்கையைச் செயல்படுத்துவதற்கு துணை புரியும்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 25ஆம் நாள் சீன மக்கள் குடியரசு ஐ.நாவின் சட்டப்பூர்வ இடத்தை மீட்டெடுத்த 50ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்
அமைதியான வளர்ச்சியில் ஊன்றி நின்று வரும் சீனா, உலக அமைதியைப் பேணிக்காப்பதில் முக்கிய சக்தியாக மாறி, மனித குலத்தின் முன்னேற்ற இலட்சியத்துக்கு தொடர்ந்து பங்காற்றி வருகின்றது.
பல்லுயிர் பாதுகாப்பு, நமது பூமி தாயகத்தைப் பேணிக்காத்து, மனிதர்களின் தொடர வல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்குத் துணை புரியும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள் உயிரின பல்வகைமை பொது ஒப்பந்தத்தை உருவாக்கிய நாடுகளின் 15ஆவது மாநாட்டில் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்திலேயே, பல்வேறு தரப்புகளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். ஆனால், சில மேற்கத்திய நாடுகள், இந்த ஒத்துழைப்பு மேடையை அரசியல் மோதலுக்கான அரங்கமாக மாற்ற முயல்கின்றன.
அமெரிக்காவின் உயிரிய ராணுவ நடவடிக்கைகள் எப்போதும் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. அமெரிக்க ராணுவத்தின் தலைமையில், உலகளவில் 200க்கும் அதிகமான உயிரிய ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது, பரந்த அளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
8ஆம் நாள் வெளியிடப்பட்ட சீனாவில் பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான வெள்ளை அறிக்கை, இத்துறையின் சீனாவின் சிந்தனைகள், நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளை, சர்வதேசச் சமூகத்துக்குக் காட்டுகிறது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர் யாங்சியேச்சு, தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் உதவியாளர் ஜேக் சல்லிவன் ஆகியோர் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 6ஆம் நாள் ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
சீனாவின் பன்முக ஓரளவு வசதியான வாழ்க்கை எனும் வெள்ளையறிக்கையை 28ஆம் நாள் சீன அரசு வெளியிட்டது. இது, ஓரளவு வசதியான சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் நடைமுறைகளை மீளாய்வு செய்து, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கக் கட்டுமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, சர்வதேச சமூகத்தின் பொது கவனத்திற்குப் பதில் அளித்துள்ளது
சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் “சின்ஜியாங்கின் மக்கள் தொகை அதிகரிப்பு” பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டது.
இவ்வறிக்கையில் அதிக தரவுகளின் மூலம் சின்ச்சியாங்கின் மக்கள் தொகை அதிகரிப்பு நிலைமை
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் சட்டவிரோதமாக 1028 நாட்கள் தடைக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுவாவெய் தொழில் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குநர் மென் வென்சோ, சீன அரசின் முயற்சியுடன், 24ஆம் நாள், சிறப்பு விமானத்தின் மூலம் தாய்நாட்டுக்குத் திரும்பிப் புறப்பட்டார்
அணு ஆயுதம் கொண்ட அமெரிக்கா, பிரிட்டனுடன் சேர்ந்து, அணு ஆயுதம் இல்லாத ஆஸ்திரேலியாவுக்கு ராணுவ நோக்கில் பயன்படும் அணுத் தொழில் நுட்ப உதவி வழங்குகிறது. இது, வெளிப்படையாக எடுக்கப்படும் அணு ஆயுதப் பரவல் செயல் தான்.
ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடிப்படையில், உரிய முறையில் கருத்து வேறுபாடுகளைக் களையவும் ஒத்துழைப்பை ஆழமாக்கவும் முடியும். சீனா- ஆசியான் இடையேயான பயனுள்ள ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் உலகின் வளர்ச்சிக்கு அதிக நேர்மையான சக்தியை ஏற்படுத்தும்
உலகின் பிற நாடுகளுடன் ஒட்டுப்பிடும் போது, கோவிட்-19 தொற்றின் பாதிப்பைச் சமாளிப்பதில் சீனப் பொருளாதாரம் சக்திமிக்க செயல்திறனை வெளிக்காட்டுகிறது. இந்நிலையில் உலகப் பொருளாதார அதிகரிப்பைத் தூண்டும் தனிச்சிறப்பான ஆதாரமாக சீனா மாறியுள்ளது
இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில்
எந்தவொரு நாடும் தனித்து நின்று பயங்கரவாதத்தை வேரறுத்து விட முடியாது. எனவே, உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பில் பல்வேறு நாடுகளும்
ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.
பொய்கள், உண்மையை மறைக்க முடியாது. பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு எடுத்து, சின்ஜியாங் மீது அவதூறு பரப்பி வரும் மேற்காத்திய நாடுகளில் சீனா எதிர்ப்புச் சக்திகளின் உள்நோக்கம் என்ன என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளலாம்.
பயங்கரவாத எதிர்ப்பு நோக்குடன், அமெரிக்கா இந்த போர் தொடுத்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, அது அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 9ஆம் நாள் நடைபெற்ற பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 13ஆவது கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பயன்தரும் ஒத்துழைப்பு குறித்து ஊன்றி நிற்க வேண்டிய 5 அம்ச முன்மொழிவுகளை முன்வைத்தார்.
2021 சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகப் பொருட்காட்சி 7ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நிறைவடைந்தது. இதில் எட்டப்பட்ட ஒப்பந்த எண்ணிக்கைகளும் வர்த்தக மதிப்பும் கடந்தப் பொருட்காட்சியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை
பிரச்சினைக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் கெர்ரி அண்மையில்,
சீனாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது, காலநிலை மாற்ற ஒத்துழைப்பு உள்ளிட்ட
விவகாரங்கள் குறித்து சீனாவும் அமெரிக்காவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.
மனித குலத்தின் உடல் நலத்துடன் தொடர்புடைய வைரஸ் தொற்று ஆய்வுப் பிரச்சினையில், உண்மைகள் என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா சரியான முறையில் பதில் அளிக்க வேண்டும்.
சர்வதேச
சமூகத்தின் நியாயமான வேண்டுகோளை அமெரிக்க அரசியல்வாதிகள் கருத்தில் கொண்டு,
அறிவியல் ரீதியாக வைரஸ் தோற்றம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பாதைக்குத் திரும்பி,
சர்வதேச புலனாய்வுக்கு ஒத்துழைப்பு நற்க வேண்டும்.
செப்டம்பர் 2ஆம் நாளிரவு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2021ஆம் ஆண்டு சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியின் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரை நிகழ்த்தி, சீனாவின் சேவை வர்த்தக வளர்ச்சிக்கான சில புதிய நடவடிக்கைகளை அறிவித்தார்
“கரோனா வைரஸ் தோற்றம்” குறித்து மூன்று மாத ஆய்வுக்குப் பின், அமெரிக்க உளவு துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், “இருக்கலாம்”, “வாய்ப்புள்ளது” போன்ற சொற்கள் அதிகம் உள்ளன. உறுதியாக எதையும் சொல்லவில்லை என்று பிறர் எள்ளி நகையாடும் வகையில் உள்ளது
சர்வதேச
சமூகம் கையோடு கைகோர்த்து, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் வைரஸ் தோற்றம்
பற்றிய ஆய்வு அறிவியல் ரீதியான பாதைக்குத் திரும்புவதை முன்னேற்ற வேண்டும்.
ஆப்கனில்
அமெரிக்கா உருவாக்கிய மனித நேய சீற்றங்கள், நீண்டகாலமாக மனித உரிமை துறையில்
அமெரிக்கா நடைமுறைப்படுத்தி வரும் இரட்டை வரையறையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.
கடற் படுக்கையிலான சுரங்க பாதை வழியாக, ஜப்பானின் ஃபுகுஷிடா டாய்ச்சி முதலாவது அணு உலை விபத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சு நீரை கடற்பரப்பிற்குள் வெளியேற்ற ஜப்பான் அரசும் டோக்கியோ மின்னாற்றல் தொழில் நிறுவனமும் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் ஆகஸ்ட் 24-ஆம் நாள் தெரிவித்தன.
பெரிய சந்தை அளவு, விடாப்பிடிக்கும் பொருளாதாரத் திறன், துல்லியமான கொள்கை வழிகாட்டல் ஆகியவற்றின் மூலமாக, சீனா பணவீக்கத்தை கட்டுபாட்டிற்குள் வைத்துள்ளதோடு,
ஆப்கனில்
இன்று ஏற்பட்டிருக்கும் முடிவுக்குப் பின்னால் அமெரிக்காவின் சில முக்கியச்
செயல்பாடுகள் இருப்பதாக ரஷ்யாவைச் சேர்ந்த அமெரிக்க அரசியல் ஆய்வாளரான ஆண்ட்ரூ
கொரிப்கோ குறிப்பிடுகின்றார்.
விரிவான நோய் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை, பயனுள்ளதாகவும் செலவு குறைவாகவும் உள்ளன என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் உயர்மட்டத்தின் கருத்தில், புலனாய்வின் முடிவு அதன் நோக்கம் அல்ல. புலனாய்வின் மூலமாக, சீனாவின் தூதாண்மை முயற்சிகளைப் புறக்கணிப்பதும், சீனாவுடனான பேச்சுவார்த்தையில் வெல்லும் வாய்ப்புகளை அதிகரிப்பதும் தான் நோக்கம்
தொற்று தடுப்பில் அமெரிக்கா தோல்வியடைந்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்று போலி தகவல் பரபரப்பு தான். அரசியல் சுயநலன்களை பெற்று, பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் வகையில், பொய்களை உருவாக்கி உள்ள அமெரிக்க அரசியல்வாதிகள், அமெரிக்க மக்களை ஏமாற்றியதோடு, உலகின் நோய் தடுப்பு முன்னேற்றப் போக்கில் தடையை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட்-19 எதிர்த்து போராடுவதில் அமெரிக்காவின் தோல்வி, பொருளாதார மீட்சி வலிமையின்மை, சமூக கொந்தளிப்பு அதிகரிப்பு முதலிய காரணிகளால், அமெரிக்காவின் அடிமட்ட மக்கள் முன்கண்டிராத நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொருளாதாரத் துறையில் சீனாவுடனான தொடர்பைத் துண்டிப்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வர்த்தகம் மற்றும் முதலீடு பற்றிய புள்ளிவிவரங்களின் பார்வையில், அமெரிக்கா - சீனா இடையே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் நிலை ஆழமாகி வருகிறது.
அமெரிக்காவில் 3.6 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்ற உண்மையை மக்கள் நம்ப முடியாது.
உலக மக்கள் தொகையில் அமெரிக்கா 4 சதவீதம் விகிதம் மட்டும் வகிக்கிறது. ஆனால், அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று பாதிப்பு, உலகளவில் 18 விழுக்காட்டு இடம்பெறுகிறது. கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடுவதில் அமெரிக்கா சிக்கலை ஏற்படுத்தும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
கொவைட்-19 நோய் பரவல் காலத்தில், அமெரிக்காவின் அரசியல்வாதிகள் எப்போதுமே சீனாவின் மீது குற்றஞ்சாட்டி வந்தனர். இதன் மூலம் நோய் பரவல் தடுப்பில் தோல்வி என்று கூறப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிஞர் அல்லிசன் கூறினார்
4ஆவது அலை கொவிட்-19 நோய் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் நாள் ஒன்றுக்கு 1.1 இலட்சத்துக்கும் மேலானோருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சீனா மற்றும் லிதுவேனியா இடையிலான தூதாண்மை உறவுகளான கூட்டறிக்கையை லிதுவானியா மீறி, "தைவான்" என்ற பெயரில் "பிரதிநிதி அலுவலகத்தை" நிறுவ தைவான் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதுவரை அமெரிக்காவில் 3.5 கோடிக்கும் மேலானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு எண்ணிக்கை 6.1 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இவ்விரு எண்ணிக்கையும் உலகளவில் மிக அதிக அளவாக இருக்கிறது.
கரோனா
வைரஸ் உருவான இடத்தை கண்டறிவது, அறிவியலின் அடிப்படையில் நடைபெற வேண்டும். இந்த விசயத்தில் அமெரிக்காவின் பயங்கரவாத சதி உலகிற்கு
பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் அண்மையில் உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸைச் சந்தித்த போது, உலகச் சுகாதார அமைப்பு சீனா உள்ளிட்ட இடங்களில் கொவைட்-19 பற்றிய மேலதிக புலனாய்வு மேற்கொள்வதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக கூறினார்
உலக சுகாதார பேரவையில் பார்வையாளர் என்ற தகுநிலையை மீண்டும் பெற தைவானுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உதவியளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, அமெரிக்க நாடாளுமன்ற செனெட் அவையின் தூதாண்மையுறவு கமிட்டி அண்மையில் ஏற்றுகொண்டது.
அமெரிக்கத் தேசிய அறிவியல் கழகத்தின் இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, முழு அமெரிக்காவில் கோவிட்-19 நோய் தொற்று எண்ணிக்கை, 60 விழுக்காட்டு அளவில் குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம்.
கோவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வை அரசியலாக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள், ஆய்வக கசிவு என்ற சதியைப் பரப்பி, சீனா மீது அவதூறு செய்து அரசியல் நலன்களைப் பெறுவதற்கான ஆயுதமாக உருவாக்கி வருகின்றனர்.
ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் புலானாய்வு செய்ய சர்வதேச் சமூகம் வலியுறுத்துவதற்கு போதுமான ஆதாரம் உண்டு. 2019ஆம் ஆண்டு ஜுலையில், இரண்டு மிக அசாதாரணமான நிகழ்வுகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்தன. முதலில் ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தை மூட அமெரிக்க ராணுவம் திடீரென முடிவு செய்தது. இரண்டாவதாக, அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட்-19 தொற்றுடன் ஒடுப்பிடுகையில் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளைக் கொண்ட மின் சிகரெட் நிமோனியா நோய் ஏற்பட்டது.
சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சியெ ஃபொங், அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் ஷெர்மன் ஆகியோர் ஜுலை 26ஆம் நாள் சீனாவின் தியன்ஜின் மாநகரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்கா இன்று எதிர்கொள்ளும்
அச்சுறுத்தலாக அந்நாட்டின் பெரும் நெருக்கடிகளைக் குறிப்பிட்டிருக்கலாம். அவ்வாறு
குறிப்பிட்டிருப்பாரேயானால் அமெரிக்காவின் தற்போதைய மிகப்பெரும் எதிரி அமெரிக்கா
தான் என்பது அனைவருக்கும் துல்லியமாகப் புரிந்திருக்கும்.
32 ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது. “மேலும் விரைவு, மேலும் உயரம், மேலும் வலிமை” என்ற ஒலிம்பிக் பொன்மொழியில் மேலும் ஒற்றுமை என்பதைச் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அண்மையில் தீர்மானித்தது
அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனத்தைச் சேர்ந்த எ.பி.டி-சி-39 எனும் இணையத் தாக்குதல் அமைப்பு,, சீன விண்வெளித் துறையின் ஆய்வு நிறுவனங்கள், எண்ணெய் தொழில் நிறுவனங்கள், பெரிய இணைய நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் ஆகியற்றின் மீது 11 ஆண்டுகளாக தொடர்ந்து இணையத் தாக்குதல் தொடுத்துள்ளது.
எபெக்
எனப்படும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஓத்துழைப்பு மாநாட்டில் காணொலி வழி கலந்து கொண்ட
தலைவர்கள், அடுத்த இருபது ஆண்டுகளுக்குள், உலகம் பொருளாதார நெருக்கடியிலிருந்து
வெளியேறும் வழியை இரட்டிப்பாக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ப்ளூம்பார்க் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், மதிப்பீட்டு விதிமுறையைத் திருத்துவதன் மூலம் கோவிட்-19 எதிர்ப்பில் சிறந்த திறமையுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. இதன் விளைவாக, உலகளவில் எதிர் விளைவைச் சந்தித்தது.
கரோனா தடுப்புக்கான ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார மீட்சி பற்றிய ஷிச்சின்பிங்கின் உரை கூட்டு அறைக்கூவலைத் தோற்கடிக்கும் ஏபெக் பிரதேசத்தின் மனநம்பிக்கையை அதிகரித்துள்ளது.
தற்போது, வரலாற்றில் மிக நல்ல வளர்ச்சியின் காலக்கட்டத்தில் சின்ச்சியாங் உள்ளது. சின்ச்சியாங்கின் வளர்ச்சி
மூலமூம், எதார்த்த நடவடிக்கை மூலமூம் மனித உரிமையை சீனா எவ்வாறு பாதுகாக்கின்றது
என்பதை பன்னாடுகள் அறிந்து கொள்ள வேண்டும்.
சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியம் 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, 53, 21,670 கோடி யுவான்னாகும்.
அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் அண்மையில் "கரோனா வைரஸ் எதிர்ப்பு தொற்றுநோய் தரவரிசையை" வெளியிட்டது. அதில், உலகளாவிய தொற்றுநோய் எதிர்ப்பு செயல்திறனில் அமெரிக்கா "மிக சிறந்த" நாடாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளின் மக்களால் வாங்கப்படவும் பயன்படுத்தப்படவும் கூடிய பொது உற்பத்திப் பொருட்களாக மாற்ற வேண்டும் என்பது உலகிற்கு சீனா வழங்கிய வாக்குறுதியாகும். இதற்காகச் சீனா தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.
ப்ளூம்பர்க் பத்திரிகை வெளியிட்ட கொவைட்-19 நோய் தடுப்பில் சிறப்பாகச் செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை முதலிடத்தில் வெளியானது.இப்பட்டியலின் நம்பகத்தன்மை மீது மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான சட்டம் நடைமுறைக்கு வந்த ஓராண்டில் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் உரிமை மற்றும் மக்களின் நலனைப் பேணிக்காப்பதில் ஆதரத்தூணாகப் பெரும் பங்காற்றியுள்ளது.
மனிதகுல முன்னேற்றத்தைத் தூண்டும் முக்கிய ஆற்றலாக, அரசியல் கட்சி சரியான முன்னேற்றத் திசையை நோக்கி, மக்களுக்கும் மனிதகுலத்துக்கும் இன்பமான வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தை விளைவிக்கும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்க வேண்டும்
கடந்த நூற்றாண்டுக்காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் போராட்ட போக்கினை மீளாய்வு செய்து, தன்னை துணிவுடன் புரட்சி செய்து,
இக்கட்சி இதர கட்சிகளுடன் வேறுபடும் தெளிவான சின்னமாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆற்றலுடன் கூடிய சமூகத்தின் அனைத்துச் சக்திகளையும் ஒன்றிணைத்து, எதிர்காலத்தில் மேலும் பல புதிய சீன அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் என்பதில் ஐயமில்லை.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் 28ஆம் நாள் பிற்பகல் காணொளி வழியில் பேச்சுவார்த்தை நடத்தி,கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
70க்கும் மேலான ஆண்டுகளின் வளர்ச்சியுடன், இந்த அமைப்பு முறை சீனாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் தனிச்சிறப்புமிக்க சாதகங்களையும் வலுவான உயிராற்றலையும் வெளிக்காட்டியுள்ளது.
அர்ஜென்டினாவின் கோரிக்கைக்கு முனைப்புடன் பதில் அளிக்க வேண்டிய பிரிட்டன், வெகுவிரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்கி ஐ.நா.வின் தீர்மானத்தின் படி, அமைதியான நியாயமான மற்றும் நிலையான தீர்வினைக் காண வேண்டும்
அமெரிக்காவோ பதில்களே இல்லாத பிரச்சினைகளை எதிர் கொண்டு
வருகின்றது. அத்தகு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் அமெரிக்கா
சீனாவைத் தாக்குவதைக் கைவிட்டுவிட்டு தன் பிரச்சினைளைக் களைவதற்கான
சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
வரலாறு முதல் உண்மை வரை, கனடா மனித உரிமைப் பிரச்சினையில் நிறைய குற்றங்களைச் செய்துள்ளது. இந்நிலையில், மனித உரிமைக்கான முன்மாதிரி நாடு என்னும் பெயரில் பிற நாடுகளை குற்றஞ்சாட்டும் தகுநிலை கனடாவுக்கு இல்லை
கோவிட்-19 தொடர்பாக மேலதிகமாகக் கண்டறியப்பட்டுள்ள உண்மைகளைப் பொருட்படுத்தாமல், சீன எதிர்ப்பில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் இன்னும் கூட கோவிட்-19 தொற்று நோயின் தோற்றம் என்ற பெயரில் பொய்களைப் பரப்பி வருகின்றனர்.
திறப்பு நிலையை விரிவாக்குவதிலும் பொருளாதார உலகமயமாக்கலை முன்னெடுப்பதிலும் சீனா நிலைத்து நிற்பதற்குரிய தெளிவான அறிகுறி ஒன்று இக்கூட்டத்தில் இருந்து வெளிப்பட்டது.
அமெரிக்க அரசுத் தலைவர் பைடன், ஐரோப்பியப் பயணத்தின் போது, ஜி 7 நாடுகள் குழுவின் உச்சிமாநாடு, நேட்டோ உச்சிமாநாடு, அமெரிக்க-ஐரோப்பிய உச்சிமாநாடு ஆகியவற்றின் மூலம், மதிப்புகளின் முரண்பாட்டின் அடிப்படையில் ஒரு கூட்டணியை உருவாக்க முயன்றார்.
பிராந்திய அமைதியைப் பாதுகாத்தல், பிரதேச வளர்ச்சியை முன்னெடுத்தல், பலதரப்புவாதத்தைப் பேணுதல், சர்வதேச உறவை ஜனநாயகமாக்கல் ஆகியவற்றில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முன்மாதிரியை உருவாக்கி உள்ளது.
தைவான் பிரச்சினை சீன-அமெரிக்க உறவில் மிகவும் முக்கியத்துவம் மற்றும் உணர்வலை தன்மை வாய்ந்த பிரச்சினையாகும். ஒரு சீனா என்ற அடிப்படை எல்லையை எந்த ஒரு சக்தியும் கடந்து செல்வதற்குச் சீனா ஒருபோதும் அனுமதிக்காது.
கரோனா வைரஸ் பற்றிய ஆரம்பத் தொற்றுகள் உலகின் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருகின்றன. இது, இவ்வைரஸின் தோற்றம் தொடர்பான ஆய்வை உலகளவில் மேற்கொள்ளப்பட வேண்டியதை வெளிப்படுத்தியுள்ளது.
இன்றிருக்கும்
நிலையில் கரோனா பெருந்தொற்றை வெல்வதற்கான சிறந்த ஆயுதமாகத் தடுப்பூசியே
கருதப்படுகின்றது. தடுப்பூசி
விநியோகத்தைப் பொருத்தவரை தேசியவாதச் சிந்தனையை நிராகரித்து நியாயமான விநியோகத்தை
ஊக்குவிக்க வேண்டும்.
அமெரிக்காவில் இனவெறியால் வன்முறை சட்ட அமலாக்கம் குறையவில்லை. மாறாக, ஓரளவில் இந்த செயலுக்கு மேலதிக பாதுகாப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் அமைப்பு முறை ரீதியிலான இனவாதம் தீவிரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவருடைய நெல் ஆராய்ச்சி உலகிற்கு நன்மை அளித்துள்ளது' 'உண்மையான வீரர்' '100 கோடிக்கும் பேருக்கு உணவு பாதுகாப்பு அளித்துள்ளது' உள்ளிட்ட பல பாராட்டுக்கள் யுவான் லோங்பிங்கிற்கு கிடைத்துள்ளது.
சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டு உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கும் முன், ஐரோப்பிய ஒன்றியதின் மீதான தடை நடவடிக்கைகளை சீனா முதலில் நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் மே 20ஆம் நாள் வெளியிட்ட ஒரு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
74ஆவது உலக சுகாதார மாநாடு விரைவில் தொடங்க உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில மேலை நாடுகள் தைவான் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளைப் போல, இவ்வாண்டு உலகச் சுகாதார அமைப்பு தைவானுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கவில்லை
பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்துள்ள நிலைமையிலே அமெரிக்கா மனித உரிமை என்பதை மீண்டும் வசதியாகப் பயன்படுத்தி ஐ.நா பாதுகாப்பவை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளா வண்ணம் செயல்பட்டுள்ளது
சீனாவின் தியன் வென்-1 ஆய்வுக் கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியதற்கு அமெரிக்கத் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், ரஷிய கூட்டாட்சி விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் முதலிய நிறுவனங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு இலட்சம் பேர்களில் 8ஆயிரத்து 930 நபர்கள் மட்டுமே பட்டம் பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது.
சீனா அன்னிய முதலீட்டை ஈர்க்கும் முன்னேற்றப் போக்கு மென்மேலும் விரைவாக தொடர்ந்து வருகிறது என்று ரஷிய செய்தி ஊடகம் ஒன்று அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
சீனாவும் இரஷ்யாவும் தடுப்பூசி இராஜதந்திரத்தைச் செயல்படுத்துவதாகக் குற்றம் சாட்டும் அமெரிக்கா, தனக்கிருக்கும் சர்வதேச சமூகத்தின் அதிருப்தியைச் சமாளிக்க அதே தடுப்பூசி இராஜதந்திரத்தையே பயன்படுத்தி வருவது நகைமுரணான ஒன்று.
உலகின் மதிப்பு தொடர் சங்கிலி சார்ந்த ஒத்துழைப்பில் சின்ஜியாங்கின் பங்களிப்பைச் சீர்குலைத்து, சீன நிறுவனங்களின் சர்வதேச போட்டித் திறனைக் குறைப்பதோடு, சின்ஜியாங் மூலம் சீன வளர்ச்சியைத் தடுப்பது அவர்களின் உண்மையான நோக்கமாகும்.
அமெரிக்காவைத் தாண்டுவது, சீனாவின் வளர்ச்சி இலக்கு அல்ல. தன்னை மேலும் நன்றாக வலுப்படுத்தி தங்கள் நாட்டு பொது மக்கள் இனிமையாக வாழ் வைப்பது தான் சீனாவின் நோக்கமாகும். ஒரு நாட்டுக்கு எதிராக அறைகூவலை விடுப்பதில் சீனாவுக்கு ஆர்வம் இல்லை.
பருவநிலை மாற்றப் பிரச்சினை
ஒன்றிரண்டு நாடுகளின் பிரச்சினையன்று. மானுட இனம் காலதாமதமின்றி கூட்டாகச்
சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உலகளாவிய பிரச்சினையாகும்.
ஜனநாயகம் என்ற பெயரில் செயல்பட்டுள்ள அமெரிக்கா உண்மையிலேயே பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையீட்டு வருகிறது. மனித உரிமை என்ற பெயரில் செயல்பட்டு அமெரிக்கா மனித நேய பேரிடரை ஏற்படுத்தியது. உலகின் நிலைப்புத்தன்மையைச் சீர்குலைத்து சிக்கலை உருவாக்கிய நாடு அமெரிக்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்ட உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது. இந்த சூழலில், தடுப்பூசி விவகாரத்தில் ஊன்றி நின்று வரும் தேசியவாதிகளின் மனச்சாட்சி விழித்துக் கொள்ளமா?
2021ஆம் ஆண்டு அமெரிக்காவின் வியூகப் போட்டி மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவையின் வெளிநாட்டு உறவுகள் குழு ஏப்ரல் 21-ஆம் நாள் பரிசீலனை மூலம் ஏற்றுக்கொண்டது.
2020ஆம் ஆண்டு, மனித வரலாற்றில் வெப்பமான மூன்று ஆண்டுகளில் ஒன்றாகும். காலநிலை பேரழிவுகள், புதிய ரக கரோனா வைரஸ் ஆகியவற்றால் உலகளவில் 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இரட்டை பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகள் கட்டுமானத்தின் மூலம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, மனிதகுலத்துக்குக் கூட்டு வெற்றி மற்றும் பகிர்வு, வளர்ச்சி மற்றும் செழிப்பு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பரஸ்பர மதிப்பு ஆகியவற்றின் எதிர்காலத்தை உருவாக்க உதவியளித்து வருகின்றது.
ஜப்பான் நிறைவேற்றியுள்ள தீர்மானம் மிகவும் பொறுப்பின்மை மற்றும் நாகரிகமற்ற தன்மையைக் காட்டுகிறது. ஜப்பான் தனது தவறான தீர்மானத்தை மீண்டும் கருத்தில் கொண்டு, திரும்ப பெற வேண்டும்!
போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டத்தின் மூலம், ஆசியா மற்றும் உலக வளர்ச்சிக்குத் துணை புரியும் சீனாவின் புதிய அறிவுதிறமையையும் புதிய வாய்ப்புகளையும் பெறுவதை உலகம் எதிர்ப்பார்க்கின்றது.
காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது முழு மனித குலத்தின் பொது இலட்சியமாகும். இதனைப் புவியமைவு அரசியல், இதர நாட்டைத் தாக்குதல் மற்றும் வர்த்தகத் தடை உள்ளிட்டவற்றுக்காகப் பயன்படுத்தக் கூடாது.
அமெரிக்க அரசு 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஹாங்காங்கில் கலவரங்களை உருவாக்கி, நாட்டை பிளவுபடுத்த முயற்சித்த குற்றத்திற்காக, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நீதி மன்றம் அளித்த நியாயமான தீர்ப்பு பற்றி திரித்து பேசப்பட்டு, தொடர்புடைய குற்றவாளிகளைச் சீனா விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
அமெரிக்க-ஜப்பான் தலைவர்கள் உச்சிமாநாட்டில் சீனாவைத் தடுத்துக் கட்டுப்படுத்துவது தொடர்பான அம்சங்களைக் கொண்ட ஒரு கூட்டறிக்கை ஏப்ரல் 16ஆம் நாள் வெளியிடப்பட்டது.
இத்தகைய அமெரிக்க-ஜப்பான் கூட்டணி மேலாதிக்க வாதத்தை வெளிப்படுத்தியுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பைப் பாதிக்கும் இக் கூட்டணி இந்தோ-ஆசிய பிரதேசத்தில் நெரெதிர் சூழலை உருவாக்கும்.
சீனப் பொருளாதாரத்தின் மீட்சியினால், வர்த்தகம், மூலவளம், நுகர்வுப் பொருட்கள் முதலிய துறைகளில் சீனாவின் தேவை அதிகரித்து வருகின்றது. இது உலகில் இதர நாடுகளுக்கு ஆக்கப்பூர்வ பயன் தரும்.
புதிய ரக கரோனா வைரஸ் உலகளவில் பரவிய போதிலும், அமெரிக்கா பல நாடுகளுக்கு தன்னிச்சையாக தண்டனை விதித்து வருகின்றது. இது மனித நேய நெருக்கடியை தீவிரமாக்கியுள்ளது.
அமெரிக்காவில் இனவாதம் பன்முக ரீதியில் தொடச்சியாக நிலவுகிறது. வெள்ளையர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அந்நாட்டின் சமூகத்தில் அனைத்தும் தோன்றி வருகிறது