கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசு எச்சரிக்கை
2022-09-24 18:51:34

வெறுப்பு குற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளின் தீவிர அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கனடாவில் உள்ள மற்றும் கனடாவிற்குச் செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு இந்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.   

 வெறுப்பு குற்றங்கள், மதவெறி வன்முறை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற சம்பவங்களை கனட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, இந்த ஆலோசனையை வெளியிட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கனடாவில் உள்ள இந்தியக் குடிமக்கள் மற்றும் மாணவர்களும் பயணம் அல்லது கல்விக்காக கனடாவுக்குச் செல்பவர்களும், தகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.