© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
நேபாளத்தின் கொள்ளை நோய் மற்றும் நோய் கட்டுப்பாட்டுப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டின் துவக்கம் முதல் செப்டம்பர் 23ஆம் நாள் வரை, நேபாளத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22988. அவர்களில் 29 பேர் உயிரிழந்தனர். தற்போது, அந்நாட்டின் 76 மாவட்டங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இந்நோய் பரவலைத் தடுக்கும் விதம், நகர வடிகால் அமைப்புமுறை மேம்பாடு, சுற்றுப்புறத்தூய்மை உள்ளிட்ட நடவடிக்கைகளை நேபாளம் மேற்கொண்டு வருகின்றது.