சீனாவில் வேளாண் துறையின் பசுமையான வளர்ச்சி
2022-09-28 16:45:39

சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, 13ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் நாடளவில் பசுமையான புவிசார் குறியீடு கொண்ட வேளாண் பொருட்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆண்டுதோறும் சமூகத்துக்கு வழங்கப்படும் விவசாயப் பொருட்களின் மொத்த அளவு 20 கோடி டன்னைத் தாண்டியுள்ளது. மேம்பட்ட விதைகளின் வளர்ப்பு, வணிகச் சின்னங்களின் உருவாக்கம், தரப்படுத்தப்பட்ட உற்பத்தி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் சீனாவில் பசுமையான தரமிக்க வேளாண் பொருட்களின் வினியோகம் அதிகரித்து வருகிறது.

இந்த அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் 27ஆம் நாள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் வேளாண் வணிகச் சின்னங்களின் புகழ் மற்றும் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. புவிசார் குறியீடு வழங்கப்பட்ட வேளாண் பொருட்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் மூலம், கிராமப்புறத் தனிச்சிறப்புடைய ஒரு தொகுதியான தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதோடு, வேளாண் நிலச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் பெரும் முன்னேற்றமும் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.