கொழும்பு துறைமுக நகரில் தொழில் நடத்துவதற்கான விதிமுறை
2022-09-29 19:51:05

இலங்கை அரசுத் தலைவர் விக்ராம்சிங்கே அண்மையில் வெளியிட்ட ஒரு விதிமுறையில், சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரில் செயல்பட விரும்பும் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரில் தொழில் தொடங்க விரும்பும் நபர் உரிமம் பெரும் விதம், இந்நகரின் பொருளாதார ஆணையத்துக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் மற்றும் ஆதார ஆவணங்களை இந்த ஆணையம் மதிப்பீடு செய்த பிறகு, கொள்கை ரீதியிலான ஒப்புதல் கடிதம் ஒன்றை வழங்க உள்ளது.

உரிமம் வழங்கப்பட்டதிலிருந்து 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். ஆனால் உரிமம் பெற்ற 6 மாதங்களுக்குள் விண்ணப்பம் செய்தவர் அலுவல் தொடங்காமல் இருந்தால், இவ்வுரிமம் ரத்து செய்யப்படும்.