தியாகிகள் நினைவு நாளில் ஷிச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
2022-09-30 11:04:23

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தியாகிகள் தினம் செப்டம்பர் 30ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலையில், பெய்ஜிங்கிலுள்ள தியான்ஆன்மென் சதுக்கத்தில் தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நினைவு நிகழ்ச்சியில் ஷிச்சின்பிங்  உள்ளிட்ட  தலைவர்கள் கலந்து கொண்டனர்.

2014ஆம் ஆண்டு, தியாகிகள் நினைவு தினம் சீனாவில் அனுசரிக்கப்பட்டது. அதன்படி, தியாகிகளை நினைவு கூரும் நிகழ்ச்சி நடைபெறும். 2018ஆம் ஆண்டு, சீன மக்கள் குடியரசின் தியாகிகள் பாதுகாப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ஆண்டுதோறும் செப்டம்பர் 30ஆம் நாள், தியாகிகள் நினைவுத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் பெய்ஜிங்கிலுள்ள தியான்ஆன்மென் சதுக்கத்தில் தியாகிகளை நினைவு கூறும் நிகழ்ச்சி நடத்தப்படும்.