இந்திய ராணுவத்தில் இலகு ரக போர் ஹெலிகாப்டர் சேர்க்கை
2022-10-03 18:43:57

உள்நாட்டியேலே தயாரிக்கப்பட்ட முதல் தொகுதி இலகு ரகப் போர் ஹெலிகாப்டர்களை விமான படைக்கு இந்திய பாதுகாப்பமைச்சர் அர்பணித்துள்ளார்.

ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் விமானப்படைத் தளத்தில் இந்த விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மறைந்து தாக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த வகை ஹெலிகாப்டர்களால் கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்தில் தரையிறங்கவும் புறப்படவும் முடியும். ஏவுகணை உட்பட ஆயுதங்களை ஏற்றிச் செல்லவும் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.