அமெரிக்க ஈஎன் சூறாவளியில் 80 பேர் பலி
2022-10-03 17:09:04

அமெரிக்காவில் அக்டோபர் 2ஆம் நாளிரவு வரை, ஈஎன் என்ற சூறாவளி தாக்கியதில், ஃப்ளோரிடா மற்றும் வட கரொலீனா மாநிலங்களில் குறைந்தபட்சம் 80 பேர் உயிரிழந்தனர். நிவாரணப் பணி நடைபெற்று வருவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் உள்ளூர் காவற்துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 28ஆம் நாள் ஈஎன் சூறாவளி, ஃப்ளோரிடா மாநிலத்தைத் தாக்கியது. அதில் ஏராளமான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் சேதமடைந்தன. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

ஈஎன் சூறாவளியால், சுமார் 2800 கோடி முதல் 4700 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.