ஆப்கானிஸ்தானின் மதப் பள்ளி ஒன்றில் குண்டு வெடிப்பு
2022-12-01 17:01:35

ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாநிலத்தின் மதப் பள்ளிக்கூடம் ஒன்றில் நவம்பர் 30ஆம் நாள் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த 2 மாதங்களில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பள்ளிகள், மசூதிகள் மற்றும் பேருந்துகளை குறி வைத்து தாக்குதல் தொடுத்தாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.