© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாநிலத்தின் மதப் பள்ளிக்கூடம் ஒன்றில் நவம்பர் 30ஆம் நாள் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த 2 மாதங்களில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பள்ளிகள், மசூதிகள் மற்றும் பேருந்துகளை குறி வைத்து தாக்குதல் தொடுத்தாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.