புதிய யுகத்தில் சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு
2022-12-02 18:18:39

புதிய யுகத்தில் சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்புக்கான அறிக்கையைச் சீன வெளியுறவு அமைச்சகம் டிசம்பர் முதல் நாள் வெளியிட்டது.

இவ்வமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீஜியான் 2ஆம் நாள் கூறுகையில், சீனாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. தற்போது இரு தரப்புகள் ஒத்த வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றன. எதிர்காலத்தில் அரபு நாடுகளுடன் இணைந்து, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, நாகரிகப் பரிமாற்றங்களை வலுப்படுத்தி, புதிய யுகத்தில் சீன-அரபு நாடுகளின் பொது சமூகத்தைக் கூட்டாக கட்டியமைத்து, இரு தரப்புகளின் மக்களுக்கு நன்மை புரிந்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.