காபுலிலுள்ள மசூதியில் நிகழ்ந்த தற்கொலை குண்டு வெடிப்பு
2022-12-03 17:18:08

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலிலுள்ள மசூதி ஒன்றில் டிசம்பர் 2ஆம் நாள் தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளிட்ட 3 பேர் இறந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

இந்த மசூதி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய கட்சி அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வெடிக்கும் நேரத்தில், ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் கட்சியின் தலைவரும் முன்னாள் தலைமையமைச்சருமான குல்புதின் ஹிக்மத்யார் மசூதியில் மத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். ஹிக்மத்யார் காயமடையவில்லை. தற்போது வரை இச்சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.