© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கையின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 மணி நேரத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை எச்சரித்துள்ளது.
மின்னலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனத் தெரிவித்த வானிலை ஆய்வு மையம், மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களில் மின்னல் தாக்கியதால் பலர் உயிரிழந்துள்ளதாக இம்மையம் தெரிவித்துள்ளது.
பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் இம்மையம் எச்சரித்துள்ளது.