© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் நடந்த குண்டுவெடிப்பில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜ்குமார் மன்னா, தனது வீட்டில் வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, இந்த தீவிர வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. எனவே தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு கோருகிறேன் என்று பாரதிய ஜனதா கட்சியியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றசாட்டை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது மற்றும் குண்டுவெடிப்பில் கட்சிக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறியுள்ளது.