லியான்யுன்காங் துறைமுகம் கையாண்ட சரக்கு தொகை அதிகரிப்பு
2022-12-05 12:22:45

2022ஆம் ஆண்டு, சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் லியான்யுன்காங் துறைமுகம் நீர் போக்குவரத்து வழிகளை வளர்த்து, கடல்-இருப்புப் பாதை கூட்டுப் போக்குவரத்து வழிமுறையை மேற்கொண்டு, பெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. ஜனவரி முதல் நவம்பர் திங்கள் வரை கையாளப்பட்ட சரக்குகளின் மொத்த அளவு 27 கோடி டன்னை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.32 விழுக்காடு அதிகரித்தது.