கடற்பரப்பில் வெற்றிகரமான மின் வினியோகம்
2022-12-05 14:34:49

சீனாவின் போச்சொங்-கென்லி எண்ணெய் வயல்களின் கரை மின்சாரப் பயன்பாட்டுத் திட்டப்பணியின் உயர் மின்னழுத்த கடலடி கம்பியும் கடற்பரப்பிலுள்ள 3 மின்சார சக்தி தளங்களும் வெற்றிகரமாக மின்னாற்றலை வினியோகித்துள்ளன என்று டிசம்பர் 5ஆம் நாள் கிடைத்த ஒரு தகவலில் தெரிவிக்கப்பட்டது. இந்த வெற்றி, மேல் கல் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தைக் குறிப்பதோடு, இத்திட்டப்பணியின் முழு சேவைக்கும் உறுதியான அடிப்படையிட்டுள்ளது.

சீனாவின் கடற்பரப்பில் கரை மின்சாரப் பயன்பாட்டுத் திட்டப்பணிகளில், போச்சொங்-கென்லி எண்ணெய் வயல்களின் கரை மின்சாரப் பயன்பாட்டுத் திட்டப்பணி மிகப் பெரிய ஒன்று.

இத்திட்டப்பணி நடைமுறைக்கு வந்தால், கடற்பரப்பில் மின் வினியோகத்தின் நிலைத்தன்மை உயர்வு, எரியாற்றல் கட்டமைப்பின் மேம்பாடு, கார்பன் குறைந்த பசுமையான வளர்ச்சி, கார்பன் உச்சநிலை மற்றும் நடுநிலை இலக்குகளின் நனவாக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.