சியோல் நகரில் பெரிய ராட்டினத்தின் கட்டுமானத் திட்டம்
2023-03-10 10:35:24

சியோல் வளையம் என்னும் பெரிய ரக ராட்டினத்தைக் கட்டியமைக்க தென் கொரியாவின் சியோல் நகர அரசு திட்டமிட்டுள்ளது. இது உலகத்தின் 2வது பெரிய ராட்டினமாக விளங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதிப்பீட்டின்படி, இந்த ராட்டினம் பயன்பாட்டுக்கு வரும் போது ஆண்டுக்கு 35 லட்சம் பேர் ராட்டினத்தில் ஏறி மகிழலாம்.