சூரியனுடன் ஒத்திசைந்த சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் இந்த செயற்கைக் கோள் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பின், தொழில் நுட்ப சோதனையை மேற்கொள்ளும். அது ஏற்றிச் சென்றுள்ள பல்சர் என்றழைக்கப்படும் துடிவிண்மீன் உணர்கருவியின் செயல்திறன் மற்றும் விண்வெளி சூழலுக்கு ஏற்ற தன்மை குறித்து சோதிக்கப்பட உள்ளது. மேலும், இதர சோதனைகளை மேற்கொள்ளும் வகையில், 4 மைக்ரொ நானோ செயற்கைக் கோள்கள் இச்செயற்கை கோளுடன் இணைந்து விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.