அமைதியான உலகம் என்ற தலைப்பிலான 2017ஆம் ஆண்டின் தாய்லாந்து கைப்பாவை நாடக விழா பிப்ரவரி 20 முதல் 26ஆம் நாள் வரை நடைபெற்று வருகிறது. உலகளவில் 24 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 54 கைப்பாவை நாடகக் குழுக்கள் இதில் கலந்து கொண்டுள்ளன. கைப்பாவை நாடக வளர்ச்சியை முன்னேற்ற இந்நிகழ்ச்சி உதவும்.