2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டி 17ஆம் நாளிரவு சீனாவின் குவாங்சோ நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் போட்டியின் துவக்க விழாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதில் அவர் கூறுகையில், விளையாட்டுத் துறை வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகளுக்குச் தனிச்சிறப்பு உண்டு. நடப்புப் போட்டி மூலம், வீரர்களின் போட்டியாற்றலை உயர்த்த முடியும். பாரம்பரிய விளையாட்டைப் பரவல் செய்வதுடன், பல்வேறு நாட்டு மக்களுக்கிடையேயான நட்புறவையும் முன்னேற்றலாம் என்றார்.