ஈராக்கின் மோசுல் போரின் சாதனையை நிலைநிறுத்த வேண்டும் என்று ஈராக் தலைமையமைச்சரும், ஆயுதப் படைகளின் தலைமை தளபதியுமான ஹைதர் அல் அபாத் 9ஆம் நாள் மோசுல் நகரில் தெரிவித்தார்.
மேற்கு மோசுல் நகரின் கூட்டாட்சி காவற்துறை படையின் தலைமையகத்தில், அபாத் அன்று அரசுப் படையின் தளபதிகளுடன் கூட்டம் நடத்தினார். அரசுப் படை மோசுல் போரின் சாதனையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, ஐ. எஸ் அதி தீவிரவாத அமைப்பின் எஞ்சிய சக்திகளை அகற்றுவது, இந்நகரின் பாதுகாப்பை மீட்டு, நிலக்கண்ணி மற்றும் வெடிக் குண்டு பொருட்களை நீக்குவது, அப்பாவி மக்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்று அவர் இக்கூட்டத்தில் கோரினார்.