சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரக அரசவையின் தலைவர் சுல்தான் அல் ஜப்பெர் கேட்டுக் கொண்டதன் பேரில், தற்போதைய வளைகுடா நெருக்கடி பற்றி 19ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.
முதலாவதாக, அரசியல் மற்றும் தூதாண்மை வழிமுறையில் தீர்ப்பது என்ற திசையை ஆதரிக்க வேண்டும். 2ஆவதாக, வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் கட்டுக்கோப்புக்குள், அரபு வழிமுறையின் மூலம் தற்போதைய சர்ச்சையைத் தீர்க்க வேண்டும். 3ஆவதாக, பல்வேறு தரப்புகள் வெகுவிரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய மூன்று கருத்துக்கள் சீனாவின் நிலைப்பாடாகும். பல்வேறு தரப்புகளின் தேவையின் போது, வளைகுடா நிலைமையை தணிவுப்படுத்தி, வளைகுடாவின் அமைதி மற்றும் நிதானத்துக்கு ஆக்கப்பூர்வ பங்கு ஆற்ற சீனா விரும்புகிறது என்று வாங்யீ தெரிவித்தார்.
சுல்தான் அல் ஜப்பெர் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரக தரப்பு, சீனாவின் நியாயமான நிலைப்பாட்டை பாராட்டுகிறது. அதோடு, வாங்யீ வழங்கிய 3 கருத்துக்களை ஆதரிக்கிறது என்று கூறினார்.(ஜெயா)