அமெரிக்க இராணுவப் படையினர் இருவர், 2ஆம் நாள் தெற்கு ஆப்கானிஸ்தானில் தங்களது கடமையை நடைமுறைப்படுத்திய போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தனர். அமெரிக்கத் தரப்பு இச்சம்பவம் தொடர்பாக கள ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அதே நாள் தெரிவித்தது.ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் பன்னாட்டு பாதுகாப்பு உதவிப் படை 2014ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நாட்டில் தங்களது போர்க் கடமையை முடித்துக்கொண்டது.