இரு நாட்டு எல்லையைக் கடந்த படைவீர்ர்களை இந்தியா வெளியேற்ற வேண்டும் என்று வாஷிங்டனிலுள்ள சீன-அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் நிபுணர் சோரப் குப்தா அண்மையில் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
பஞ்சசீல கோள்கையை ஆரம்பித்த நாடுகளில் இந்தியா ஒன்றாகும். ஆனால் அதன்படி பூடானை இந்தியா அணுகவில்லை. எல்லைப் பிரச்சினை பற்றி சீனாவும் பூடானும் கடந்த 80ஆம் ஆண்டுகள் முதல் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. தற்போது அதிகாரப்பூர்வ எல்லை வகுக்கப்படவில்லை. இருந்தபோதிலும், இரு தரப்புகளுக்கும் இடையில் பரந்த கருத்தொற்றுமையை உருவாக்கியுள்ளன. 3ஆவது தரப்பான இந்தியா இதில் தலையிடுவது சரியல்ல. பூடானின் இறையாண்மைக்காக செயல்பட வேண்டாம். காரணம், இந்தியாவின் இச்செயல், சர்ச்சையில்லாத பகுதியை சர்ச்சைக்குரிய பகுதியாக மாற்றக் கூடும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.