• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு
  2017-08-20 14:48:49  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் மேலும் 34பேர் உயிரிழந்தனர் என்று இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பேரழிவு நிர்வாக பிரிவின் அதிகாரி ஒருவர் 19ஆம் நாள் தெரிவித்தார்.

இம்முறை அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளது. கடந்த 5 நாட்களில் 4லட்சத்து 60ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு குடியமர்த்தப்பட்டனர். அரசு 1289 மீட்பு மையங்களை நிறுவியுள்ளது.

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அசாம் மற்றும் அந்நாட்டின் வட கிழக்குப் பகுதியின் மறுசீரமைப்புக்கு உதவியளிக்க, 2000கோடி ரூபாய் நிதித் தொகையை ஒதுக்கீடு செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040