• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
  2017-08-22 09:14:50  cri எழுத்தின் அளவு:  A A A   

பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் அந்நாட்டின் வட மேற்குப் பகுதியில் மேற்கொண்டுள்ள கைபர்--4 எனும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், திட்டமிட்ட இலக்குகள் நனவாக்கப்பட்டுள்ளது என்றும் அந்நாட்டு ராணுவ வட்டாரம் 21ஆம் நாள் தெரிவித்தது.

பாகிஸ்தான் முப்படை செய்தி அலுவலகத் தலைவர் அசிப் காஃபோர் அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை துவங்கிய பிறகு, ஆப்கானிஸ்தானை ஒட்டியமைந்துள்ள கைபர், வட வாசிரிஸ்தான் உள்ளிட்ட பழங்குடி பகுதிகளில் பயங்கரவாதிகளை ராணுவ வட்டாரம் கடுமையாக ஒடுக்கி, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையே பயங்கரவாதிகளின் பாதையை மூடியுள்ளது என்று தெரிவித்தார்.

ராணுவ நடவடிக்கையில் 52 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமுற்றனர். தவிர, பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள ராணுவ வட்டாரம் அழித்து, அதிகமான நிலக்கண்ணிகளை நீக்கி, 91 பாதுகாப்பு சோதனை சாவடிகளை நிறுவியுள்ளது என்று காஃபோர் தெரிவித்தார். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040