ஈராக்கின் ஒருமைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவளித்து, ஈராக்கினைப் பிளவுபடுத்தும் செயலை எதிர்ப்பதாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாடீஸ் 22ஆம் நாள் பாக்தாத்தில் வலியுறுத்தினார்.
ஈராக்கில் பயணம் மேற்கொண்ட மாடீஸை ஈராக் தலைமையமைச்சர் அபாத் அன்று சந்தித்தார் என்றும், ராணுவத் துறையில் ஈராக்-அமெரிக்க ஒத்துழைப்பு பற்றியும், ஐ.எஸ் அமைப்பை ஈராக் ஒடுக்குவதில் பெற்றுள்ள புதிய முன்னேற்றம் பற்றியும் இருவரும் விவாதித்ததாக ஈராக் தலைமையமைச்சரின் அலுவலகம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மாடீஸின் மனப்பான்மை, ஈராக் குர்டிஷ் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுதந்திரம் பற்றிய பொது வாக்கெடுப்புப் பிரச்சினையுடன் தொடர்புடையது. இவ்வாண்டு செப்டம்பர் 25ஆம் நாள் குர்டிஷ் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுதந்திரம் பற்றி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று இப்பிரதேசத் தலைவர் பார்சானி ஜூன் திங்கள் அறிவித்தார். ஈராக் மத்திய அரசு, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை இது உருவாக்கியுள்ளது. இப்பொது வாக்கெடுப்பு நடத்தும் நேரத்தை ஒத்திப்போட வேண்டும் என்று அமெரிக்க அலுவலர்கள் முன்னதாக விருப்பம் தெரிவித்தனர். (மீனா)