2017ஆம் ஆண்டு முற்பாதியில், ஐரோப்பாவுக்கு வந்த அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை, 2016ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால், அவர்கள், இடம்பெயரும் வழியில் நிறைய சிக்கல்களையும் இடர்ப்பாடுகளையும் சந்தித்து வருவதாக 24ஆம் நாள் ஐ.நாவின் அகதிகள் விவகாரத்துக்கான உயர் ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இவ்வாண்டு முற்பாதியில், துருக்கியிலிருந்து, மத்திய தரைக் கடலைக் கடந்து, கிரேக்கத்துக்கு வந்த அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை 94 விழுக்காடு குறைந்துள்ளது என்று இவ்வறிக்கை தெரிவித்தது.
(கலைமணி)